முகமது எகியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


முகமது எகியா (Mohamed Ehiya) என்பவர் ஒரு மலர் வர்த்தகர் ஆவார். இவர் ஆசிய அளவில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். உலகமெங்கும் சுமார் 4500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் மலர்களை சாகுபடி செய்து வரும் இவர் 14 நாடுகளுக்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதியையும் செய்து வருகிறார்.

சுயசரிதை[தொகு]

இந்திய மாநிலமான தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறை அடுத்த நடுக்கடை என்ற சிறிய கிராமத்தில் முகமது கனி, அமீர் ஜான் தம்பதியினருக்கு மூன்று சகோதரர்களில் இரண்டாவதாகப் பிறந்தார். [1] தனது ஆரம்பக்கல்வியை நடுக்கடையில் முடித்த இவர், உயர்நிலைக் கலிவிக்காக திருவையாறு சென்று அங்கு ஆறாம் வகுப்பில் சேர்ந்தார். அங்கே தனது ஆசிரியரின் கோபத்தினால் இவரது கல்வி தடைபட்டது.

பின்னர், மலேசியாவில் வேலைபார்த்து வந்த இவரது தந்தைக்கு உதவியாக சிலகாலம் அவருடன் இருந்தார். பின்னர், துபாயில் வேலை பார்த்து வந்த தனது சகோதரனிடம் சென்றார். அவர் இவருக்கு துபாய் காவல் நிலையத்தில் ஒரு அலுவலக உதவியாளர் பணியினைப் பெற்றுத் தந்தார். விடுமுறை நாட்களில் தனது சகோதரனுக்கு உதவியாக அவர் பணி செய்து வந்த பூக்கடைக்குச் செல்லத் தொடங்கினார்.

புதிய வணிகம்[தொகு]

மலர் வியாபாரத்திற்கு உலகமெங்கும் வரவேற்பு இருந்ததை அறிந்த எகியா தனது சகோதரன் பசீர் அகமதுவுடன் சேர்ந்து 1993இல் துபாயில் "சன் புளோரா டிரேடிங்" என்ற சிறிய அளவில் வர்த்தகத்தை ஆரம்பித்தார். பின்னர், படிப்படியாக சார்ஜா, மலேசியா, கென்யா [2] , பெங்களூர், சிட்னி, கோலாலம்பூர், பேங்காக், மஸ்கட் கத்தார், எத்தியோப்பியா,[ தாய்லாந்து]] சவூதி அரேபியா போன்ற இடங்களில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தினார். இவரது நிறுவனம் தற்போது 6000 மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ளது. [3]

பிற வணிகங்கள்[தொகு]

எகியா, மலர் வர்த்தகம் தவிர வீட்டுமனை விற்பனை, சுற்றுலாப் போக்குவரத்து, பெட்ரோலியப் பொருட்கள் வர்த்தகம் போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார். மற்றும் மலேசியாவில் உணவு, மருத்துவ உபகரண வர்த்தகமும், கானாவில் மர வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகிறார்.  

அறக்காரியங்கள்[தொகு]

  • திருவையாரில் தான் படித்த பள்ளிக்கு மூன்று வகுப்பறைகள் கொண்ட ஒரு கட்டிடம் கட்டி அதற்கு தனது தலைமையாசிரியர் டி.என் பட்டாபிஷேகத்தின் பெயரை வைத்துள்ளார்.
  • தஞ்சாவூரில் ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தை புதுப்பிக்கும் பணிக்கு நிதியுதவி செய்துள்ளார்.
  • தனது சொந்த ஊரான நடுக்கடையில் ஒரு இசுலாமியத் தொழுகைக் கூடம் கட்டித் தந்துள்ளார்.

குடும்பம்[தொகு]

இவருக்கு பசீர் அகமது, சாதிக் பாட்சா என்ற இரு சகோதரர்கள் இருக்கின்றனர். இவருக்கு மெஹ்ராஜ் பேகம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தம்பதியினருக்கு சமீர் என்ற ஒரு மகனும், சமீரா என்ற ஒரு மகளும் (இரட்டைக் குழந்தைகள்) இருக்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-05-14. பார்க்கப்பட்ட நாள் 2021-05-14.
  2. https://btfgroup.com/
  3. https://btfgroup.com/about-us/

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_எகியா&oldid=3567886" இலிருந்து மீள்விக்கப்பட்டது