மீரா சங்கர் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீரா சங்கர் யாதவ்
2010 இல் யு.எஸ்-இந்தியா பீப்பிள் டு பீப்பிள் மாநாட்டில் மீரா சங்கர்
பிறப்புமீரா யாதவ்
9 அக்டோபர் 1950 (1950-10-09) (அகவை 73)
அமெரிக்காவுக்கான இந்திய தூதர்
பதவியில்
2009–2011
முன்னையவர்ரோனன் சென்
பின்னவர்நிருபமா ராவ்

மீரா சங்கர் யாதவ் (Meera Shankar-née Yadav) என்பவர் 26 ஏப்ரல் 2009[1] முதல் 2011 வரை அமெரிக்காவில்[2] இந்தியத் தூதராகப் பணியாற்றினார். இவர் அமெரிக்காவுக்கான இந்தியாவின் இரண்டாவது பெண் தூதராக இருந்தார். விஜயலட்சுமி நேரு பண்டித் முதல்வராக இருந்தார். இவருக்குப் பிறகு ஆகத்து 1, 2011 அன்று நிருபமா ராவ் பதவியேற்றார்.

1973 தொகுதி அதிகாரியான மீரா சங்கர், 1991 முதல் 1995 வரை வாசிங்டன், டி. சி. யில் பணியமர்த்தப்பட்டார். இவர் தூதர் ரோனென் சென் பதவிக்கு வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

மீரா சங்கர் நைனித்தால் உள்ள தூய மரியன்னை பள்ளியில் படித்தார். பின்னர் சிம்லாவில் உள்ள தூய பேட் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1973-ல் இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார்.

சங்கர் 1985 முதல் 1991 வரை இந்தியப் பிரதமர் அலுவலகத்தில் இயக்குநராகவும், 1991 முதல் 1995 வரை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திலும் பணியாற்றினார். வெளியுறவுத் துறை அமைச்சில் பணியாற்றும் போது, தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு மற்றும் நேபாளம் மற்றும் பூட்டானுடனான உறவுகளைக் கையாளும் இரண்டு முக்கிய பிரிவுகளுக்குத் தலைமை தாங்கினார்.

2009க்கு முன்பு, செருமனியின் பெர்லினில் இந்தியத் தூதராக பணியாற்றினார்.

ஜி. சங்கர் பாஜ்பாய்க்குப் பிறகு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக வாசிங்டனில் நியமிக்கப்பட்ட முதல் தூதரக அதிகாரி சங்கர் ஆவார். 2003ஆம் ஆண்டில், இவர் கூடுதல் செயலாளராகப் பதவி உயர்வு அடைந்தார். இவர் ஐக்கிய நாடுகள் அவை மற்றும் பன்னாட்டு பாதுகாப்புக்கான பொறுப்பை வகித்தார்.

மற்ற நடவடிக்கைகள்[தொகு]

சங்கர் டாய்ச் வங்கியின் ஆல்ஃபிரட் ஹெர்ஹாசன் கெசெல்சாஃப்டின் அறங்காவலர் குழுவில் இடம்பெற்றுள்ளார். 2012ஆம் ஆண்டில் இந்திய நிறுவனமான ஐடிசி லிமிடெட்டின் இயக்குநர்கள் குழுவில் இடம் பெற்ற முதல் பெண்மணி ஆனார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

சங்கர் 1973 தொகுதி இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான அஜய் சங்கரை மணந்தார். இவர்களுக்குப் பிரியா என்ற மகள் உள்ளார்.[3]

சர்ச்சை[தொகு]

2010 திசம்பரில் ஜாக்சன்-எவர்ஸ் வானூர்தி நிலையத்தில் சோதனைகள் முடிந்து வானூர்தி நிலையத்தினுள் சென்றபின் மீண்டும் குறுக்கீடு செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டார். இதன் மூலம் அமெரிக்க வானூர்தி நிலையங்களில் இடைநிறுத்தப்பட்டு சோதனைக்குள்ளான இந்தியப் பிரபலமானவர்களின் பட்டியலில் இவரும் இணைந்தார். இந்நிகழ்வு செய்திகளில் வெளிவந்தது. இந்த சம்பவத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வழிவகுத்தது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Welcome to Embassy of India, Washington D C, USA". Indian Embassy, Washington. Archived from the original on 15 April 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-04-14.
  2. Meera shankar. "Meera shankar". பார்க்கப்பட்ட நாள் 2012-10-14.
  3. Scott, Gail (28 March 2011). "Private Indian Couple Dedicates Careers to Public Service". Washington Diplomat. http://www.washdiplomat.com/index.php?option=com_content&view=article&id=7298:2011-03-29-17... பார்த்த நாள்: 7 August 2017. 
  4. "After pat-down, US pats Meera". The Economic Times. 11 December 2010. http://articles.economictimes.indiatimes.com/2010-12-11/news/27611311_1_ambassador-meera-shankar-mississippi-airport-indian-embassy. பார்த்த நாள்: 13 March 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரா_சங்கர்_யாதவ்&oldid=3675048" இலிருந்து மீள்விக்கப்பட்டது