உள்ளடக்கத்துக்குச் செல்

மீனா நாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனா நாராயணன்
இந்தியாவின் முதல் பெண் ஒலிப்பதிவு பொறியாளர்
பிறப்பு1905
சிவகங்கை, தமிழ்நாடு
இறப்பு1954
தேசியம்இந்தியா
துணைவர்/கள்நாராயணன்
பெற்றோர்சீதாராமன், பர்வதவர்தினி

மீனா நாராயணன் (Meena Narayanan) என்பவர் இந்தியத் திரைப்பட உலகின் முதல் பெண் ஒலிப்பதிவாளராவார்.[1]

இளமைக் காலம்

[தொகு]

மீனா, 1905 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் பர்வதவர்த்தினி, சீதாராமன் இணையருக்கு மகளாகப் பிறந்தார். சீதாராமன் சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளராகப் பணியாற்றியவர்.[2] மீனாவின் சித்தி லோக சுந்தரி ராமன் விஞ்ஞானி சர் சி.வி ராமனின் மனைவி ஆவார். மீனா உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும், அன்றைய வழக்கப்படி சிறு வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டது. இவரின் கணவர் ஏ. நாராயணன் தென்னியந்தியத் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவராவார்.[3]

ஒலிப்பதிவுப் பணி

[தொகு]

தமிழ்த் திரையுலகில் மௌனப்படங்கள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்த காலத்தில், முதல் முறையாக ‘சவுண்டு ஸ்டுடியோ’ ஒன்றை சென்னை சேத்துப்பட்டு/கீழ்ப்பாக்கம் பகுதியின் பூந்தமல்லி சாலையில் உள்ள நாடார் தோட்டத்தில் அமைத்தார். ‘ஸ்ரீ ஸ்ரீனிவாச சினிடோன்’ அல்லது ‘சவுண்ட் சிட்டி’ தென்னிந்தியாவின் முதல் பேசும் ஒலிப்பதிவுக் கலைக்கூடம் ஆகும்.[3]

நாராயணன் மும்பையிலிருந்து ஒலிப்பதிவுக் கலைஞர் பொத்தார் என்பவரை அழைத்து வந்து நியமித்தார். ஒலிப்பதிவு உதவியாளர் பணிக்கு மனைவி மீனாவை அமர்த்திய நாராயணன், அதே ஆண்டு ஸ்ரீநிவாச கல்யாணம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கினார். இதன் மூலம் மீனா ஒலிப்பதிவு நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். [4]

1936-ஆம் ஆண்டு பொத்தார் பணியிலிருந்து விலகிவிட்டார். அதன் பிறகு மீனா ஸ்ரீனிவாச சினிடோனின் ஒலிப்பதிவாளராக நியமிக்கப்பட்டார். கணவர் நாராயணன் இயக்கிய விஸ்வாமித்ரா படத்தின் ஒலிப்பதிவை இவர் தனியே செய்தார். 1937-ஆம் ஆண்டு கிருஷ்ண துலாபாரம், விக்கிரம ஸ்தீரி சாகசம், 1938-ஆம் ஆண்டு துளசி பிருந்தா, போர் வீரன் மனைவி, மட சாம்பிராணி, ஸ்ரீ ராமானுஜர், விப்ர நாராயணா என்று தொடர்ச்சியாக  நாராயணன் தயாரித்து இயக்கிய திரைப்படங்களில் ஒலிப்பதிவுப் பொறியாளராக மீனா பணியாற்றியுள்ளார்.[2]

இறப்பு  

[தொகு]

1939-ஆம் ஆண்டு நாராயணன் தன் 39-ஆவது வயதில் காலமானார். அதற்குப் பிறகு மீனாட்சி தன் பணியைத் தொடரவில்லை.1954-ஆம் ஆண்டு அவர் மாரடைப்பு காரணமாகக் காலமானார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 லூயிஸ், நிவேதிதா (2021). முதல் பெண்கள் (2 nd ed.). மைத்ரி புக்ஸ். p. 142.
  2. 2.0 2.1 "India's first woman sound engineer, unsung yet". THE HINDU.
  3. 3.0 3.1 "சினிமாவின் கோட்டையாகச் சென்னையை மாற்றியவர்!". கட்டுரை. தி இந்து. 23 திசம்பர் 2016. Retrieved 13 சனவரி 2017.
  4. "தமிழ் சினிமா 100 நூற்றாண்டு நிறைவு: சினிமாவின் கோட்டையாகச் சென்னையை மாற்றியவர்!". Hindu Tamil Thisai. 2016-12-23. Retrieved 2025-04-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனா_நாராயணன்&oldid=4266460" இலிருந்து மீள்விக்கப்பட்டது