மீநாயகன் புனைகதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிசி வரைகதை கதாபாத்திரமான கேப்டன் மார்வெல்.

மீநாயகன் புனைகதை அல்லது சூப்பர்ஹீரோ புனைகதை (Superhero fiction) என்பது மீநாயகன்கள் என்று அழைக்கப்படும் தனித்துவப்பட்ட ஆடை அணிந்து குற்றங்களுக்கு எதிராக சாகசங்கள், ஆளுமைகள் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கொண்டுள்ள புனைகதைகளின் வகையாகும். இவர்களின் பாத்திரம் தங்கள் பிரபஞ்சத்திற்கு சூப்பர் வில்லன்களிடமிருந்து ஏற்படும் தீமையை எதிர்த்துப் போராடுவதற்கும், பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பொதுவாக அமெரிக்க காமிக் புத்தகங்களுடன் தொடர்புடையது, இருப்பினும் இது தழுவல்கள் மற்றும் அசல் படைப்புகள் மூலம் பிற ஊடகங்களில் விரிவடைந்துள்ளது.

திரைப்படம்[தொகு]

1940 களில் சூப்பர் மீநாயகன் திரைப்படம் குழந்தைகளை இலக்காகக் கொண்டு சனிக்கிழமை திரைப்பட சீரியல்களாகத் தொடங்கின, காமிக் புத்தக சூப்பர் ஹீரோவின் முதல் திரைப்படத் தழுவல் 1941 இல் 'தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் கேப்டன் மார்வெல் ' ஆகும்.

தொலைக்காட்சி தொடர்கள்[தொகு]

பல நேரடி அதிரடி மீநாயகன் நிகழ்ச்சிகள் 1950 களின் முற்பகுதியிலிருந்து 1970 களின் பிற்பகுதி வரை ஒளிபரப்பப்பட்டன. ஜார்ஜ் ரீவ்ஸ் நடித்த 'அட்வென்ச்சர்ஸ் ஆஃப் சூப்பர்மேன்',[1] அதிரடி-நகைச்சுவை தொடரான 'பேட்மேன்' போன்ற தொடர்கள் ஒளிபரப்பானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீநாயகன்_புனைகதை&oldid=3423546" இருந்து மீள்விக்கப்பட்டது