மிதிலைப் புத்தாண்டு
ஜூர் சிதால் மிதிலைப் புத்தாண்டு ஆகர் போச்சோர் | |
---|---|
கடைப்பிடிப்போர் | மைதிலி மக்கள் & தாரு மக்கள் |
வகை | திருவிழா |
முக்கியத்துவம் | சூரியப் புத்தாண்டு |
கொண்டாட்டங்கள் | விருந்து, பரிசு |
நாள் | 14/15 ஏப்ரல் |
நிகழ்வு | வருடாந்திர |
தொடர்புடையன | தென், தென்கிழக்கு ஆசிய சூரியப் புத்தாண்டு |
ஜூர் சிதால் (Jur Sital) அல்லது மிதிலைப் புத்தாண்டு என்பது மிதிலை ஆண்டின் முதல் நாளாகும். இது ஆகர் போச்சோர் என்றும் அழைக்கப்படுகிறது.[1] இந்தப் புத்தாண்டு தினத்தில் மிதிலை மக்கள் போரியும் பாத்தையும் (ஆவியில் வேகவைத்த அரிசி) சோந்தேசுடன் சாப்பிடுகிறார்கள். கிரெகொரியன் நாட்காட்டி வழக்கமாக ஏப்ரல் 14 அல்லது 15ஆம் தேதி வரும் இந்த நாள் இந்தியா, நேபாளத்தின், மைதிலி மக்களாலும் தாரு மக்களாலும் கொண்டாடப்படுகிறது. இது நிராயணா மேசு சங்கராந்தி, திருகுதா புத்தாண்டு என்றும் அழைக்கப்படுகிறது.[2] மிதிலைப் பிராந்தியத்தில் பயன்படுத்தப்படும் திருகுதா பஞ்சாங்க நாட்காட்டிக்கு ஏற்ப இந்தப் பண்டிகை நடைபெறுகிறது.
தோற்றமும் முக்கியத்துவமும்
[தொகு]மைதிலி புத்தாண்டு நிராயணம் வசந்த சம இரவு நாளைத் தொடர்ந்து ஏப்ரல் 14 அன்று வருகிறது (சில நேரங்களில் கிரிகோரியன் ஆண்டில் ஒரு நாள் மாறுபடலாம்). ஏப்ரல் 15 பாரம்பரிய திருகுதா பஞ்சாங்கத்தின் முதல் நாளைக் குறிக்கிறது. வெப்பமண்டல இளவேனில் சம இரவு நாள் மார்ச் 22ஆம் தேதிக்குள் வருகிறது. மேலும் 23 பாகை அச்சம் அல்லது அலைவு ஆகியவற்றைச் சேர்த்து, இந்து நட்சத்திர அல்லது நிராயன மேசா சங்கராந்தி (சூரியன் நிராயன மேஷத்திற்கு மாறுகிறது) பெறுகிறோம்.
எனவே, மைதிலி நாட்காட்டியும் அதே தேதியில் தொடங்குகிறது. ஆண்டின் முதல் மாதமாகப் பைசாகி உள்ளது. இது தமிழ்நாடு, அசாம், வங்காளம், கேரளா, மணிப்பூர், ஒடிசா, பஞ்சாப், திரிபுரா, நேபாளம் போன்ற இந்தியாவில் உள்ள பெரும்பாலான பாரம்பரிய நாட்காட்டிகளால் அனுசரிக்கப்படுகிறது.[3]
தாரு மக்கள்
[தொகு]நேபாளத்தின் தென்கிழக்கு தேராயில், தாரு மக்கள் ஜூர் சிதாலை (சிருவா என்றும் அழைக்கப்படுகிறது) வைகாசி மாதத்தில் ஆண்டின் முதல் நாளில் ஒருவருக்கொருவர் தண்ணீர் தெளித்துக் கொண்டாடுகிறார்கள். பெரியவர்கள் பிள்ளைகளின் நெற்றியிலும் தலையிலும் ஆசீர்வாதத்துடன் தண்ணீர் ஊற்றுகின்றனர். அதே நேரத்தில் இளைஞர்கள் பெரியவர்களின் கால்களில் பாதபூசை செய்து மரியாதை செலுத்துகின்றனர். தோழர்கள் ஒருவருக்கொருவர் உடலில் தண்ணீரைத் தெளிக்கிறார்கள்.[4][5]
அதிகாரப்பூர்வ முக்கியத்துவம்
[தொகு]மைதிலி நாட்காட்டி என்பது இந்தியா, நேபாள மிதிலை பிராந்தியத்தின் பாரம்பரிய நாட்காட்டியாகும். நீண்ட காலக் கோரிக்கைக்குப் பிறகு, 2011ஆம் ஆண்டில் பீகார் அரசும் இந்த நாளை மாநிலம் முழுவதும் பொது விடுமுறையாக அறிவித்தது. அதிகாரப்பூர்வமாக, மைதிலி புத்தாண்டு தினம் பீகார் அரசாங்கத்தால் மிதிலா திவாசு என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூயர் சீதலின் பெரிய திருவிழாவின் காரணமாக இந்திய மாநிலமான பீகாரில் ஏப்ரல் 14 அன்று மிதிலா திவாசுக்கு விடுமுறை அளிக்கின்றது.[6]
படங்கள்
[தொகு]-
மைதிலி புத்தாண்டு உணவு
-
மைதிலி புத்தாண்டு-ஜூரி பாரி
-
மைதிலி புத்தாண்டு , தருவா உணவு
-
மைதிலி புத்தாண்டு , தருவா உணவு
மேலும் காண்க
[தொகு]- மிதிலைப் பிரதேசம்
- மாதேஷ் மாநிலம்
- மிதிலை பிரதேசம்
- மைதிலி மொழி
- பேகூசராய்
- மதுபானி
- சகார்சா
- முசாபர்பூர்
- வித்யாபதி
- தர்பங்கா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "When Will Maithili New Year(Aakhar Bochhor) Be Celebrated in Mithila Region=www-latestly-com". Retrieved 2024-04-12.
- ↑ "MITHILA PANCHANG". Angelfire.com. Retrieved 15 January 2019.
- ↑ "Keeping Track of Time". Imsc.res.in. Retrieved 15 January 2019.
- ↑ "Joorshital/Siruwa: A unique tradition of celebrating the New Year among Tharus in southern Nepal". https://english.onlinekhabar.com/joorshital-siruwa-tharu-new-year.html.
- ↑ टाइम्स, अन्नपूर्ण (2022-04-13). "JurShital". अन्नपूर्ण टाइम्स (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2024-01-29.
- ↑ "India (Bihar) - bank and public holidays of the world - 1970-2070". Bank-holidays.com. Retrieved 15 January 2019.