மிகெல் தே செர்வாந்தேஸ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மிகெல் தே செர்வாந்தேஸ் | |
---|---|
![]() சேர்வாண்டிசின் உருவப்படம்,[a] ஜுவான் மார்ட்டினெஸ் தே Jáuregui y Aguilar ஆல் வரையப்பட்டது (c. 1600) |
மிகேல் தே சேர்வான்டிசு சாவேத்ரா (செப்தெம்பர் 29, 1547 – ஏப்ரில் 22, 1616) ஒரு எசுப்பானிய புதின எழுத்தாளரும், கவிஞரும், நாடகாசிரியரும் ஆவார். முதலாவது தற்காலப் புதினம் எனச் சிலரால் கூறப்படும் டான் கிஃகோட்டி என்னும் இவரது புதினம் மேல் நாட்டு இலக்கியத்தில் சிறப்பு வாய்ந்தது எனவும், உலகின் மிகச் சிறந்த புதினங்களுள் ஒன்று எனவும் கூறப்படுகிறது. இவரது ஆக்கம் உலக இலக்கியங்களில் மிகவும் முக்கியமான ஒன்று என்பது சிலரது கருத்து. எசுப்பானிய மொழியில் இவரது செல்வாக்கு மிகப் பெரிதாக இருப்பதால், ஸ்பானிய மொழி சேர்வாண்டிசின் மொழி என்றும் அழைக்கப்படுவது உண்டு.