மா. சுப்பிரமணியம்
மா. சுப்பிரமணியம் (பிறப்பு: டிசம்பர் 13 1939) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். எம். எஸ். மணியம்; கொம்பன் எனும் புனைப்பெயர்களால் அறியப்பட்டவர். இவர் இதழாசிரியராகப் பணியாற்றி வருகின்றார். "கொம்பன்" என்னும் இதழுக்கு ஆசிரியராக இருந்தார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1959 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. "தனிமரம்" எனும் சமுக நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் மா. சுப்பிரமணியம் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-14 at the வந்தவழி இயந்திரம்