உள்ளடக்கத்துக்குச் செல்

மா.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை களப்பணி மையம், கன்னிவாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மா.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை களப்பணி மையம், கன்னிவாடி என்ற அமைப்பு மா. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் சார்பிலான களப்பணி மையம் ஆகும். இந்த களப்பணி மையத்தின் நோக்கம் விவசாயத்தின் நிலையான வளர்ச்சிக்கு அறிவியலைப் பயன்படுத்துதல் என்பதாகும்.[1]

அமைவிடம்

[தொகு]

இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை, தரமணியில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் கிளை அமைப்பானது திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் தொகுதி, கன்னிவாடியில் பழனி சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு எதிர்புறத்தில் அமைந்துள்ளது.[2]

மா.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் கன்னிவாடி கிளை 1996ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது வசதியற்ற மற்றும் தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்காக நிறுவப்பட்டது. தொடக்கத்தில், விதை கிராமத் திட்டம் கன்னிவாடியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், 2500 விவசாயிகளுக்கு கலப்பின விதை உற்பத்தி தொழில்நுட்பத்திற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. வெண்டை, வெங்காயம், தக்காளி, சூரியகாந்தி விதை உற்பத்திக்கான பயிற்சி வழங்கப்பட்டது.

வரலாறு

[தொகு]

1988 ஆம் ஆண்டு பேராசிரியர் மா.சா. சுவாமிநாதன் அவர்களால் நிறுவப்பட்ட மா.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (MSSRF), நிலையான கிராமப்புற மேம்பாட்டிற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உலகளாவிய அளவில் செயல்படத் தொடங்கியது.

நிறுவனர்

[தொகு]

நிலையான விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஒரு சிறந்த நிபுணரான பேராசிரியர் மா. சா. சுவாமிநாதன், இந்தியாவின் பசுமைப் புரட்சியின் சிற்பியாகக் கொண்டாடப்படுகிறார். 2024 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது. கன்னிவாடியில் உள்ள ஆராய்ச்சி மையம் சமூக வேளாண் பல்லுயிர் ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "MSSRF | About Us". www.mssrf.org. Retrieved 2025-10-03.
  2. "Field Sites". MS Swaminathan Research Foundation. Retrieved 3 October 2025.
  3. Pilani, BITS (2007-09-25). "Prof MS Swaminathan's Inspiring Talk on Biotechnology and Food". www.openpr.com (in ஆங்கிலம்). Retrieved 2025-10-03.

.