மார்சார் ஏரி
மார்சார் ஏரி Marsar Lake | |
---|---|
அமைவிடம் | சிறீநகர் மாவட்டம், சம்மு காசுமீர் |
ஆள்கூறுகள் | 34°8′38″N 75°6′36″E / 34.14389°N 75.11000°E |
வகை | அல்பைன் ஏரி |
முதன்மை வரத்து | பனியுருகல் |
முதன்மை வெளியேற்றம் | தக்வான் நல்லா |
உறைவு | திசம்பர் முதல் மார்ச்சு |
மார்சார் ஏரி (Marsar Lake) என்பது இந்தியாவின் சம்மு-காசுமீரில் உள்ள சிறீநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊட்டச்சத்து குறைந்த மலைப் பனிநிலை ஏரியாகும். தாச்சிகாம் தேசியப் பூங்காவிற்குள் அரு பள்ளத்தாக்கிற்கு அருகில் அமைந்துள்ளது.[1]
மார்சார் ஏரி தர்சார் ஏரி என்று அழைக்கப்படும் அதே பகுதியின் மற்றொரு ஏரியிலிருந்து குறைந்தபட்சம் 4,000 மீட்டர் (13,000 ) உயரமுள்ள ஒரு மலையால் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் நெருங்கிய அருகாமையும் ஒத்த பண்பு காரணமாகவும், இரண்டு ஏரிகளும் பெரும்பாலும் "இரட்டை ஏரிகள்" என்று அழைக்கப்படுகின்றன.[2] இந்தத் தளம் பல ஆண்டுகளாக பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. தர்சார்-மார்சார் மலையேற்றம் காசுமீர் பள்ளத்தாக்கின் மிகவும் விரும்பப்படும் மலையேற்றங்களில் ஒன்றாகும். இந்த ஏரியிலிருந்து தக்வான் நல்லா என்ற நீரோடை வெளிவருகிறது. இது தச்சிகாம் பள்ளத்தாக்கு வழியாக அர்வான் தோட்டத்திற்கு அருகில் சிறீநகருக்குள் நுழைகிறது. இங்கு சர்பந்த் நீர்த்தேக்கத்தை நிரப்புகிறது. இந்த நீரோடை டெல்பல் கிராமத்திற்கு அருகிலுள்ள மகாதேவ் மலையிலிருந்து பாயும் மற்றொரு நீரோட்டத்துடன் இணைகிறது. இங்கிருந்து தால் ஏரியின் முதன்மை ஆதாரமான டெல்பல் நல்லா என்று அழைக்கப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Marsar Lake Pahalgam". Tour my India. Retrieved 2016-09-29.
- ↑ S. L. Sadhu (2004). Eng Hali (15). Sahitya Akademi. p. 28. ISBN 9788126019540.
- ↑ "Tarsar Marsar Trek". Trek The Himalayas: A World of Trekking And Exploring. Retrieved 2016-09-30.