உள்ளடக்கத்துக்குச் செல்

மாரு குர்ஜர கட்டிடக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவ்லாகா கோவில், குஜராத், 12ஆம் நூற்றாண்டு
தில்வாரா சமணக் கோயில், அபு மலை, ஆண்டு 1230
ராணக்பூர் சமணர் கோயிலின் மண்டபடத்தின் அழகிய வேலைப்பாடுகளுடன் மேற்கூரை

மாரு-குர்ஜர கட்டிடக்கலை அல்லது சோலங்கிப் பாணி (Māru-Gurjara architecture or Solaṅkī style),[1]மேற்கு இந்தியாவின் குஜராத் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களில் சோலங்கிப் பேரரசால் (கிபி 960-1243) அறிமுகப்படுத்த கட்டிடக்கலை ஆகும். மாரு-குர்ஜர கோயில் கட்டிடக்கலையானது, இந்துக் கோயில் கட்டிடக்கலையில் வட இந்தியப் பிரிவான நாகரா கோயில் கட்டிடக்கலையின் துணைப் பாணியாகும்[2]மரு-குர்ஜர கடடிடக் கலையில் தில்வாரா கோயில் போன்று பல சமணக் கோயில்கள் எழுப்பப்பட்டது.[3]

மாரு-குர்ஜர கட்டிடக்கலையில் கோயிலின் முதன்மை கோபுரங்களைச் சுற்றி சிறிய அளவிலான சிறிய கோபுரங்கள் காணப்படும். மேலும் பெரிய கோயில்கள் தாழ்வாரங்களுடன் கூடிய இரண்டு சிறிய பக்க நுழைவாயில்கள் அமைந்திருக்கும்.[4] மாரு-குர்ஜர கட்டிடக்கலையில் கட்டப்பட்ட கோயில்களின் உட்புறங்கள் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயிலின் மேற்பரப்புகளில் விரிவான செதுக்கல்கள் உள்ளது. குறிப்பாக இப்பாணியில் கட்டப்பட்ட சமணக் கோயில்கள் பெரும்பாலும் உள்ளே செதுக்கப்பட்ட சிறிய தாழ்வான குவிமாடங்களைக் கொண்டுள்ளது. அவை மிகவும் சிக்கலான பூவேலைப்பாடு வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மற்றொரு தனித்துவமான அம்சம் தூண்களுக்கு இடையில் உயர்ந்த வளைவு போன்ற கூறுகள், மையத்தில் மேலே உள்ள கிடைமட்ட கற்றையைத் தொட்டு, விரிவாக செதுக்கப்பட்டுள்ளன. இவை எந்த பாணியிலான கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை. மேலும் அவை முற்றிலும் அலங்காரமானவை. இந்த பாணி பெரிய தூண் மண்டபங்களை உருவாக்கியது. இதன் பல பக்கங்களில் திறந்திருக்கும். சமண கோயில்கள் பெரும்பாலும் ஒரு மூடிய மற்றும் இரண்டு தூண் மண்டபங்களை பிரதான அச்சில் வரிசையாகக் கொண்டுள்ளது. இது சன்னதிக்கு வழிவகுக்கும்.[5]

சுவாமி நாராயணன் கோயில், ஹியூஸ்டன், ஆண்டு 2004

தில்லி சுல்தானகம் ஆட்சியின் போது, 1298ஆம் ஆண்டு முதல் மரு-குர்ஜர கட்டிடக்கலையானது நலிவடைந்தது. இருப்பினும் மாரு-குர்ஜர கட்டிடக்கலையானது சமணர்களால் 15ஆம் நூற்றாண்டு வரை வளர்க்கப்பட்டது.[6]20ஆம் நூற்றாண்டு முதல் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சுவாமிநாராயண் சம்பிரதாயத்தினர் மாரு-குர்ஜர கோயில் கட்டிடக்கலையில் சுவாமி நாராயணனுக்கு பல கோயில்கள் எழுப்பினர்.[7]

மாரு-குர்ஜர பாணி கட்டமைப்புகள்

[தொகு]

படக்காட்சிகள்

[தொகு]

துவக்க கால சமணக் கோயில்கள்

[தொகு]
சமணக் கல் கீர்த்தி துவஜம், சித்தோர்கார் கோட்டை, இராஜஸ்தான்

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Hegewald, note 3. Mitchell (1977) uses "Solanki style", while Harle is reluctant to tie the style to a specific name.
  2. Mitchell (1977), 123; Hegewald
  3. Hegewald
  4. Hegewald
  5. Hegewald; Harle, 219–220
  6. Harle, 239–240; Hegewald
  7. Hegewald
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரு_குர்ஜர_கட்டிடக்கலை&oldid=4403370" இலிருந்து மீள்விக்கப்பட்டது