மாயாவி (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாயாவி என்ற புனைபெயரில் எழுதிய எஸ். கே. இராமன் தமிழ்ச் சிறுகதை, புதின ஆசிரியர் ஆவார். இந்திய அரசாங்கத்தின் செய்தி ஒலிபரப்புப் துறையின் பம்பாய் கிளையில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

இளமையும் படைப்புகளும்[தொகு]

இவர் செங்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த சாம்பூர் வடகரை எனும் ஊரில் 1917 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஏறத்தாழ 150 சிறுகதைகளும் 9 நாவல்களும் எழுதியுள்ளார். இவரது முதல் சிறுகதை, ஜாதி வழக்கம் என்பது. இக்கதைப் பலராலும் பாராட்டப்பட்டது. சாமுண்டியின் சாபம் எனும் தலைப்பில் உள்ள சிறுகதைகள்,அன்பின் உருவம் எனும் தலைப்பில் உள்ள நாவல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

நாவல்கள்[தொகு]

  • அகதி
  • மக்கள் செல்வம்
  • சலனம்
  • ஒன்றே வாழ்வு

உசாத்துணைகள்[தொகு]

  • ஏ. சி. செட்டியார் (தொகுப்பு) "சிறுகதைக் களஞ்சியம்-தொகுதி1" சாகித்திய அக்காதமி-2000.
  • முனைவர் தேவிரா," தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம்" ஸ்ரீநந்தினி பதிப்பகம்-2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயாவி_(எழுத்தாளர்)&oldid=2637970" இலிருந்து மீள்விக்கப்பட்டது