மாப்பிள்ளை லெப்பை ஆலிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கைக் குரிய
மாப்பிள்ளை லெப்பை ஆலிம்
Mappilai Lebbai Alim
பட்டம்இமாமுல் அரூஸ்
பிறப்பு1816
இந்தியா காயல்பட்டிணம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு1898
இந்தியா கீழக்கரை, தமிழ்நாடு, இந்தியா
வேறு பெயர்கள்ஷெய்கு நாயகம்,சைய்யித் முஹம்மத்
தேசியம்இந்தியன்
இனம்அரபியர்-தமிழர்
காலம்19-ஆம் நூற்றாண்டு, நவீன காலம்
பிராந்தியம்தென்னிந்தியா, இலங்கை
பணிஅறிஞர், புத்தக ஆசிரியர், சூபி மகான், கவிஞர்
மதப்பிரிவுஅஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் (சூஃபி)
சட்டநெறிஷாஃபி மத்ஹப்
சமய நம்பிக்கைமாத்துரீதீ அகீதா
முதன்மை ஆர்வம்அரபு, அர்வி (அரபு-தமிழ்), தமிழ், அகீதா, ஃபிக்ஹ், தஃப்ஸீர், சூஃபியம், வரலாறு
ஆக்கங்கள்மஙானீ, பத்ஹுத் தைய்யான், ஙனீமத்துஸ்ஸாலிஹீன்,மின்ஹத்து ஸரன்தீப்
சூபித்துவம் order]]அரூஸிய்யா-காதிரிய்யா
குருதைக்கா ஸாஹிபு(றழி)
செல்வாக்கு செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • கல்வத் நாயகம், சாகுல் ஹமீது

மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (1816-1898) அவர்கள் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, தென்னிந்தியாவைச் சேர்ந்த மார்க்க அறிஞரும்,சூபி மகானும்,எழுத்தாளரும்,கவிஞரும் ஆவார். இவர்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கையில் இஸ்லாமிய மறுமலர்ச்சிற்கு பெரும் பங்காற்றியவர்.[1]

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

மாப்பிள்ளை லெப்பை ஆலிம் இந்தியாவின் காயல்பட்டணத்தில் பிறந்தார்கள். இவர்களின் தந்தை வெள்ளை அஹமது லெப்பை ஆலிம் ஆவார்.இவர் மாதிஹுர் ரஸூல் சதகதுல்லாஹில் காஹிரி (சதகதுல்லா அப்பா) அவர்களின் வம்சாவழியில் தோன்றியவர்.இவர்களின் இயற்பெயர் செய்யித் முஹம்மத்.அவரது இரண்டாவது வயதில், அவர்களது குடும்பம் கீழக்கரையில் குடியேறியது.இவர் தனது 10வது வயதில் புனித அல்குர்ஆனை மனனம் செய்தார்.

கீழக்கரையில் புகழ்பெற்ற மார்க்க அறிஞர் தைக்கா ஸாஹிபு(றழி) அவர்களிடம் கல்விகற்றார்கள்.பல்வேறுபட்டகல்வி ஞானங்களை தைக்கா ஸாஹிபு (றழி) அவர்களிடம் கற்றுத்தேர்ந்தார்.

பிந்திய வாழ்க்கை[தொகு]

தனது ஆசிரியர் தைக்கா ஸாஹிபு(றழி) அவர்களின் மகளை மணமுடித்தார்கள். இதனால் அவர்கள் "மாப்பிள்ளை லெப்பை ஆலிம்" என அழைக்கப்பட்டார்.பின்னர் தமது மாமனாரிடம் பைஅத்தும், கிலாபத்தும் பெற்றார்கள்.அரூஸிய்யா மத்ரஸாவை அமைத்து அதில் நூலகம் ஒன்றை நிறுவினார்கள். இவர்களுக்கு கல்வத் நாயகம், சாகுல் ஹமீது என்ற ஜல்வத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இரு மகன்கள் பிறந்தார்கள். இலங்கையிலும், தமிழகத்திலும் இவர்கள் ஆற்றிய மார்க்க சேவை மிக மகத்தானது. இலங்கையில் 355 பள்ளிவாசல்களையும் தைக்காக்களையும் நிறுவினர்.இலங்கையில் போர்ச்சிக்கீசியர்கள் மார்க்கத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை தகர்த்து மார்க்கத்தை புணருத்மானம் செய்ய பெரும் பங்காற்றினார்கள்.[1][2]

மரணம்[தொகு]

மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் தனது 84 ம் வயதில் ரஜப் பிறை 5ஹிஜ்ரி 1316 சனிக்கிழமை மாலை (கி.பி. 1898)யில் மறைந்தார்கள். இவர்களின் அடக்கஸ்தலம் கீழக்கரை தைக்காவில் அமைந்துள்ளது.

பங்களிப்புக்கள்[தொகு]

மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அரபுத் தமிழ் மற்றும் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துறைக்கு பெரும் பங்காற்றியுள்ளார்கள்.அவர்கள் பல நுால்களை எழுதியுள்ளார்கள்.[3]

  • மஙானீ(மார்க்க சட்ட நூல்)
  • பத்ஹுத் தைய்யான
  • ஙனீமத்துஸ்ஸாலிஹீன்
  • மின்ஹத்து ஸரன்தீப்- இலங்கை பற்றி எழுதப்பட்ட நுால்
  • ஹதிய்யா மாலை
  • ஹத்யா ஷரீப்
  • ராத்திபத்துல் ஜலாலிய்யா
  • தாமிரப் பட்டணம் - அரபுத் தமிழில் எழுதப்பட்ட தமிழ் நாவல்
  • தலைப் பாத்திஹா
  • மவாஹிபுல் மஜீத்-பி-மனாகிபி ஷாஹுல் ஹமீத்(நாகூரார் வரலாறு)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Tayka Shuayb Alim (1993) Arabic, Arwi, and Persian in Sarandib and Tamil Nadu. Madras :Imamul Arus Trust
  2. Shukri, M.A.N. (1986). Muslims of Srilanka. Jamiah Naleemia Inst.. பக். 352. 
  3. Torsten Tschacher (2001). Islam in Tamilnadu: Varia. (Südasienwissenschaftliche Arbeitsblätter 2.) Halle: Martin-Luther-Universität Halle-Wittenberg. ISBN 3-86010-627-9. (Online versions available on the websites of the university libraries at Heidelberg and Halle: http://archiv.ub.uni-heidelberg.de/savifadok/volltexte/2009/1087/pdf/Tschacher.pdf and http://www.suedasien.uni-halle.de/SAWA/Tschacher.pdf).

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாப்பிள்ளை_லெப்பை_ஆலிம்&oldid=3506934" இலிருந்து மீள்விக்கப்பட்டது