மானூர் சுவாமிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மானூர் சுவாமிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனிக்கு அருகில் உள்ள மானூர் கிராமத்தில் வாழ்ந்துள்ள சித்தராவார்.[1] இவர் நிர்வாணமாக இருப்பார் என்றும் பக்தர்களுக்கு போர்வையை உடலில் சுற்றிக்கொண்டு காட்சியளிப்பாரென்றும் சொல்லப்படுகிறது.

அப்பகுதி மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார். இவர் கண்ட சித்து படித்தவர்.[2] இவரது ஜீவசமாதி பெருவுடையார் கோவிலுக்கு செல்லும் வழிக்கு முன்பும் கோதைமங்கலம் அருகில் அமைந்துள்ளது.

மகா சமாதி[தொகு]

1945 நவம்பர் 4ல் மானூர் சாமி மகா சமாதியடைந்தார். தமிழ் கணக்கில் பார்திப வருடம் ஐப்பசி 19.[1] இவரது சமாதி கோதைமங்கலம் மானூர் சுவாமிகள் மகா சமாதி என்று அழைக்கப்படுகிறது.

இவையன்றி பல இடங்களில் இவர் சமாதிகள் உள்ளதாகவும் நம்புகின்றனர்.

குருபூசை[தொகு]

இவரது பிறந்த நட்சத்திரம் அன்றும் அம்மாவாசை, பௌர்ணமி அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்படுகிறது. இவரது குருநாதர் ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி. குருநாதருடைய ஜீவசமாதியும் அவ்வூர் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 [ http://temple.dinamalar.com/news_detail.php?id=38933 மானூர் சாமிகள் தினமலர் கோயில்கள் ]
  2. http://www.dinamani.com/edition_madurai/article1192049.ece மானூர் சாமி குருபூசை தினகரன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானூர்_சுவாமிகள்&oldid=2715267" இலிருந்து மீள்விக்கப்பட்டது