உள்ளடக்கத்துக்குச் செல்

மானசா தேவி கோயில், அரித்துவார்

ஆள்கூறுகள்: 29°57′29″N 78°09′53″E / 29.95806°N 78.16472°E / 29.95806; 78.16472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மானசா தேவி கோயில், அரித்துவார்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:உத்தராகண்டம்
மாவட்டம்:அரித்துவார்
அமைவு:ஹரனின் படித்துறை
ஆள்கூறுகள்:29°57′29″N 78°09′53″E / 29.95806°N 78.16472°E / 29.95806; 78.16472
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:அறியப்படவில்லை

மானசா தேவி கோயில் (Mansa Devi Temple) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள புனித நகரமான அரித்துவாரில், மானசா தேவிக்காக அமைக்கப்பட்ட ஒரு இந்துக் கோயிலாகும் . இமயமலையின் தென்கோடி மலைத் தொடரான சிவாலிக் மலையின் [1][2] உச்சியில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. பில்வ தீர்த்தம் என்றும் அழைக்கப்படும் இந்த கோவில் அரித்துவாரிலுள்ள பஞ்ச தீர்த்தங்களில் (ஐந்து புனித யாத்திரைகள்) ஒன்றாகும்.

சக்தியின் வடிவமான மானசா தேவியின் புனித இருப்பிடமாக அறியப்படும் இக்கோயில் சிவபெருமானின் மனதில் இருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. மானசா வாசுகியின் (பாம்பு) சகோதரியாகக் கருதப்படுகிறார். அவள் மனித அவதாரத்தில் வந்த சிவபெருமானின் மகள் என்றும் நம்பப்படுகிறது. மேலும், உண்மையான பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் இந்தத் தெய்வம் நிறைவேற்றுவதாக நம்பப்படுகிறது.

மானசா தேவி கோயில் ஒரு சித்தர் பீடம் (இவை வழிபடுபவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என்று அறியப்படுகிறது) ஆகும். அரித்துவாரில் அமைந்துள்ள மூன்று பீடங்களில் இதுவும் ஒன்று. சண்டி தேவி கோவிலும், மாயா தேவி கோவிலும் மற்ற இரண்டு இடங்களாகும்.[3] சன்னதியின் உள்ளே இரண்டு தெய்வங்கள் உள்ளன. ஒன்று எட்டு கரங்களுடன் காணப்படுகிறது. மற்றொன்று மூன்று தலைகளையும் ஐந்து கரங்களையும் கொண்டுள்ளது.

கோயில்

[தொகு]
கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் கம்பிவட போக்குவரத்து சேவை. பின்னணியில் கங்கை ஆற்றையும் அரித்துவாரின் அழகிய காட்சியையும் காணலாம்.

அரித்துவாருக்கு செல்லும் யாத்ரீகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக மானசா தேவி கோவில் என்று கருதப்படுகிறது.[4] இது அரித்துவாரின் புனித பாரம்பரியத்தை மேம்படுத்துகிறது. இது கடந்த பல நூற்றாண்டுகளாக அந்த இடத்தில் இருந்து வருகிறது.[5] இங்கிருந்து கங்கை ஆறு, அரித்துவாரின் சமவெளிகளின் காட்சிகளைக் காண இயலும். இக்கோயிலை அடைய இந்த புனித தலத்திற்கு மலையேற்றப் பாதையில் செல்ல வேண்டும் அல்லது கம்பிவட வழி சேவையில் சவாரி செய்ய வேண்டும். "மானசா தேவி உடன்கடோலா" என்று அழைக்கப்படும் கம்பிவட வழி சேவை யாத்ரீகர்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது யாத்ரீகர்களை அருகில் உள்ள சண்டி தேவி கோயிலுக்கு கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. கம்பிவட வழி, கீழ்நிலையத்திலிருந்து நேரடியாக மானசா தேவி கோயிலுக்கு யாத்ரீகர்களை அழைத்துச் செல்கிறது. கம்மிவப வழிப் பாதையின் மொத்த நீளம் 540 மீட்டர் (1,770 அடி). அது 178 மீட்டர் (584 அடி) உயரம்வரை செல்கிறது. ஒரு சாதாரண நாளில், கோவில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். மதிய உணவிற்காக நண்பகல் 12 முதல் 2 மணி வரை மூடப்படும்.

அரித்துவார் 'பெல்' மைதானத்திற்கு அருகிலுள்ள சிவாலிக் மலைகள் இந்த கோவிலுக்கும், சண்டி தேவி கோயிலுக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், குறிப்பாக நவராத்திரியிலும் அரித்துவார் கும்பமேளாவின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

பார்வதி தேவியின் இரண்டு வடிவங்களான மானசா தேவியும் சண்டி தேவியும் எப்போதும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள மாதா மானசா தேவி கோயிலுக்கு அருகில் சண்டிகரில் சண்டி கோயில் உள்ளது என்பதால் இந்த நம்பிக்கை மற்ற விஷயங்களிலும் உண்மையாக உள்ளது.

அரித்துவாருக்கு அருகில் உள்ள பில்வ பர்வத்தில் அமைந்துள்ள மானசா தேவி கோயில் பிரபலமானது. அரித்துவாரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் பாதசாரி பாதை ஒன்று அமைந்துள்ளது.

மற்ற மானசா தேவி கோயில்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. Sunita Pant Bansal (2008). Hindu Pilgrimage. Pustak Mahal. ISBN 978-81-223-0997-3.
  2. "Devotion and harmony by the Ganga" இம் மூலத்தில் இருந்து 2008-03-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080318175940/http://www.hindu.com/mag/2006/06/25/stories/2006062500440800.htm. 
  3. Mustseeindia.com. "Mansa Devi Temple, Haridwar". Archived from the original on 15 September 2008. Retrieved 1 February 2010.
  4. "Places to visit in and around Haridwar". Zeenews.com.
  5. Mapsofindia.com. "Mansa Devi Temple".

வெளி இணைப்புகள்

[தொகு]