மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாநில மறுசீரமைப்புச் சட்டம் (1956) என்பது இந்திய அரசின் எல்லைகளை மறுசீரமைத்து அவற்றை ஆள்வதற்கென மொழிவாரியாக அமைப்பதற்கான சட்டமாகும். இந்த சட்டம் அரசியலமைப்பின் ஏழாவது சட்டத் திருத்தம் (1956) வாயிலாகக் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் ஒவ்வொரு மாநில எல்லைகளை வரையறுத்து ஒவ்வொரு மாநிலத்துக்கான எல்லைக் கோடுகளை வரைந்து அவற்றை இந்திய ஆளுமைக்குள் உட்புகுத்தி அதனை மூன்று வகையான அ, ஆ, இ மாநிலங்களாக பிரித்தெடுத்தது.

1956-ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டாலும்கூட, மாநில மறுசீரமைப்புச்சட்டம் 1957 மட்டுமே மாநிலத்தின் எல்லைகளை வரையறுக்கும் தனித்த அதிகாரப்பூர்வ மாற்றமாக உள்ளது.