மாதுரு ஓயா தேசிய பூங்கா
Appearance
மாதுரு ஓயா தேசிய பூங்கா Maduru Oya National Park | |
---|---|
මාදුරු ඔය ජාතික වනෝද්යානය மாதுரு ஓயா தேசிய பூங்கா | |
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() | |
அமைவிடம் | கிழக்கு மாகாணம் மற்றும் ஊவா மாகாணம், இலங்கை |
அருகாமை நகரம் | பொலன்னறுவை |
ஆள்கூறுகள் | 7°34′33″N 81°08′34″E / 7.57583°N 81.14278°E |
பரப்பளவு | 58,850 எக்டேர்கள் (227.2 sq mi)[1] |
நிறுவப்பட்டது | 1983 |
நிருவாக அமைப்பு | வனவுயிர் பாதுகாப்புத் திணைக்களம், இலங்கை |
மாதுரு ஓயா தேசிய பூங்கா (Maduru Oya National Park) என்பது இலங்கையிலுள்ள ஒரு தேசியப் பூங்காவாகும். இது மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழும் மாதுரு ஓயா நீர்த்தேக்க நீரேந்து பிரதேச செயற்பாட்டின் கீழும் உருவாக்கப்பட்டது. இது பூங்காவாக 1983 நவம்பரில் அறிவிக்கப்பட்டது.[2] இது வன உயிரினங்களின் சரணாலயமாக குறிப்பாக யானைகளின் சரணாலயமாக காணப்படுகின்றது. இது ஐந்து நீர்த்தேக்க நீரேந்து பகுதிகளை பாதுகாக்கவும் முக்கியத்துவம் பெறுகின்றது. இலங்கையின் சுதேசிய இனக் குழுவான வேடுவர் சமூகம் இங்குள்ள கெனனிகலை எனுமிடத்தில் வாழ்கின்றனர்.[3] இப்பூங்கா கொழும்பிலிருந்து வடகிழக்கில் 288 கிலோமீட்டர்கள் (179 mi) தொலைவில் அமைந்துள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ The national Atlas of Sri Lanka. Department of Survey. 2007. p. 88. ISBN 955-9059-04-1.
- ↑ Green, Michael J. B. (1990). IUCN directory of South Asian protected areas. IUCN. pp. 228–231. ISBN 978-2-8317-0030-4.
- ↑ "Reservoirs of Maduru Oya National Park". Sri Lanka Wetlands Information and Database. IWMI. 2006. Retrieved 28 August 2010.
வெளி இணைப்புகள்
[தொகு]- Maduru Oya National Park Location பரணிடப்பட்டது 2015-09-04 at the வந்தவழி இயந்திரம்