மாணாக்கர் இலக்கணம்
Jump to navigation
Jump to search
மாணாக்கர் இலக்கணம் என்று நன்னூலில் எவரெல்லாம் பாடம் கேட்பதற்குரிய மாணாக்கர் ஆவர் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
தன்மகன், தன்னுடைய ஆசிரியருடைய மகன், நாட்டையாளும் அரசனுடைய மகன், பொருளை மிகுதியாக வாரிவழங்குபவன், தன்னை வணங்கி வழிபடுபவன், சொல்லும் பொருளை விரைந்து ஏற்றுக் கொள்ளும் திறனுடையோன் ஆகியவர்களுக்கே நூலைக் கற்பிக்க வேண்டும். இவர்களே மாணாக்கர் ஆவதற்கு தகுதியுள்ளவர்கள் என்று கூறப்பட்டுள்ளது[1]