மாங்குடி, திருநெல்வேலி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாங்குடி
கிராமம்
மாங்குடி is located in தமிழ் நாடு
மாங்குடி
மாங்குடி
மாங்குடி is located in இந்தியா
மாங்குடி
மாங்குடி
ஆள்கூறுகள்: 9°21′16″N 77°31′23″E / 9.354519°N 77.522922°E / 9.354519; 77.522922
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்3,957
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்626111

மாங்குடி (ஆங்கிலம்: (Mangudi (Tirunelveli District), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.[1]

அருகில் அமைந்த நகரங்கள்: சங்கரன்கோவில், திருநெல்வேலி, இராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும்.

வரலாறு[தொகு]

சங்ககாலத்தில் இந்த மாங்குடியில் வாழ்ந்த புலவர் மாங்குடி கிழார்.
மதுரைக் காஞ்சி எழுதிய இவர் தன்னை மாங்குடி மருதனார் என்று சில பாடல்களில் குறிப்பிடப்படுகிறார்.
சங்கப்பாடல் தொகுப்பில் இவரது பாடல்கள் 13 உள்ளன.

மாங்குடி தொல்லியல் களம்[தொகு]

தமிழ்நாடு தொல்லியல் துறையினர், மாங்குடியில் 2001-2002ல் அகழ்வாராய்ச்சி செய்த போது, கிமு இரண்டாம் நூற்றாண்டின் தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட கருப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்களின் துண்டுகள் கண்டுபிடித்தனர்.[2]

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3957 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 1994 ஆண்கள், 1963 பெண்கள் ஆவார்கள். மாங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 75.12% ஆகும்.

ஆதாரங்கள்[தொகு]

  1. Mangudi
  2. "Department of Archaeology - Excavation- Mangudi". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  3. கிராமம் - திருநெல்வேலி மாவட்டம்; சங்கரன்கோவில் வட்டம்; மாங்குடி கிராமம் 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை

வெளி இணைப்புகள்[தொகு]