திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில்
| மாகரல் திருமாகரலீஸ்வரர் கோயில் | |
|---|---|
அமைவிடம் தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: | 12°43′06″N 79°45′17″E / 12.71833°N 79.75472°E |
| அமைவிடம் | |
| நாடு: | |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | காஞ்சிபுரம் |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | திருமாகரலீஸ்வரர் (சிவன்) |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
| தேவாரம் பாடல் பெற்ற திருமாகறல் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில் | |
|---|---|
| பெயர் | |
| புராண பெயர்(கள்): | திருமாகறல் |
| பெயர்: | திருமாகறல் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில் |
| அமைவிடம் | |
| ஊர்: | திருமாகறல் |
| மாவட்டம்: | காஞ்சிபுரம் |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| நாடு: | இந்தியா |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | திருமாகறலீசுவரர், உடும்பீசர், புற்றிடங்கொண்டார், அடைக்கலம் காத்த நாதர், மகம் வாழ்வித்தவர், பாரத்திழும்பர், நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், அகத்தீசுவரர், பரிந்து காத்தவர், தடுத்தாட் கொண்டவர்,[1] |
| தாயார்: | புவனநாயகி,திரிபுவன நாயகி |
| தல விருட்சம்: | எலுமிச்சை |
| தீர்த்தம்: | அக்கினி தீர்த்தம்(குளம்) |
| பாடல் | |
| பாடல் வகை: | தேவாரம் |
| பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
மாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில், பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[2]
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாற்றின் வடகரையில் திருமாகறல் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் பேருந்துகளில் சென்றால் 16 கி.மீ.-இல் இங்கு வரலாம். இக்கோவில் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது. இதன் உட்பிரகாரம் யானையின் பின்புற அமைப்பில் உள்ளது. திருஞான சம்பந்தரால் பதிகம் இயற்றப்பட்டுள்ள ஏழாவது தலம் ஆகும். கோவில் நகரம் காஞ்சியில் அமைந்துள்ள அழகிய கோவில்.
சிவ தலங்களிலேயே மிகவும் சிறப்பாக இங்கு உடும்பின் வால் வடிவில் சுவாமி அமைந்துள்ளார். இங்கு அர்த்தநாரியாக பைரவ சுவாமி உள்ளார். வெள்ளை யானை மீது அமர்ந்த கோலத்தில் முருகன். இராஜகோபுரத்தில் கோவில் வரலாறு அற்புத சிற்பங்களாய் பொறிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தூண்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன.
அமைவிடம்
[தொகு]இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் செங்கற்பட்டு மாவட்டத்தில் செய்யாற்றின் கரையில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வினை தீர்க்கும் பதிகம் பாடிய தலமாகும். இராசேந்திர சோழனுக்கு பொன் உடும்பாகத் தோன்றி அவன் துரத்த புற்றில் ஓடி ஒளிந்து பின் சிவலிங்க வடிவமாக வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
கோயில் சிறப்புகள்
[தொகு]- இத்தலத்தின் லிங்கம் சுயம்பு வடிவமானது
- இறைவன் பெயர்கள்
- திருமாகரலீஸ்வரர்
- அகத்தீசுவரர்
- உடும்பீசுவரர்
- புற்றிடங்கொண்டநாதர்
- பாரத்தழும்பர்
- ஆபத்துக்காத்தவர்
- ஆபத்சகாயர்
- பரிந்துகாத்தவர்
- மங்கலங்காத்தவர்
- மகம்வாழ்வித்தநாதர்
- நிலையிட்டநாதர்
- தடுத்தாட்கொண்டவர்
- அம்பிகை பெயர் ஸ்ரீ திருபுவனநாயகி.
- தீர்த்தம் அக்னி.
- தல மரம் எலுமிச்சை.
- தல விநாயகர் ஸ்ரீ பொய்யாமொழிவிநாயகர்.
- தல முருகர் வெள்ளை யானை மீது அமர்ந்த கோலத்தில் கஜாரூடமுருகர் அமைந்துள்ளார்.
- திருப்பதிகம் திருஞான சம்பந்தரால் இயற்றப்பட்டது. இதை ஓதும் அன்பர்களுக்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும், மன நிம்மதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- http://temple.dinamalar.com/New.php?id=73
- திருமாகறல் வலைப்பூ பரணிடப்பட்டது 2018-03-14 at the வந்தவழி இயந்திரம்
| திருமாகறல் | |||
|---|---|---|---|
| முந்தைய திருத்தலம்: திருக்குரங்கணில்முட்டம் |
தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம் | அடுத்த திருத்தலம் திருவோத்தூர் |
|
| தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தல எண்: 7 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 239 | ||