மலையடிப்பட்டி குடைவரைக்கோயில்கள்
மலையடிப்பட்டி குடைவரைக்கோயில்கள், தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டத்தில் உள்ளது. அனந்தபத்ம சுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்குடைவரைக் கோயில், புதுக்கோட்டை நகரத்திற்கு வடக்கே 41 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கிபி 9-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இக்குடைவரைக் கோயில், கிபி 16-ஆம் வரை விரிவாக்கப்பட்டது.
இங்குள்ள இரண்டு குடைவரைக்கோயில்களில் ஒன்று அனந்தபத்மசுவாமிக்கும், மற்றொன்று சிவனுக்கும் உரியதாகும். [1]இக்கோயிலின் மூலவர் அனந்தபத்மசுவாமி, தாயார் கமலவள்ளி நாச்ச்சியார் ஆவார்.
போக்குவரத்து வசதிகள்[தொகு]
திருச்சி - கீரனூர் - கிள்ளுக்குடி வழியாக 17 கிமீ தொலைவிலும், மற்றொரு பாதையான திருச்சி - துவாக்குடி - பொய்யாக்குடி - அசூர் - செங்கலூர் வழியாகவும் செல்லலாம்.