மலைச்சாரல் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலைச்சாரல் இலங்கையின் மலையகப் பிரதேசத்தின் அட்டன் நகரிலிருந்து 1980களில் வெளிவந்த ஒரு கலை, இலக்கிய இரு மாத இதழாகும். இதன் முதல் இதழ் ஏப்ரல் - மே இதழாக 1984இல் வெளி வந்தது. விலை ரூபாய் 3.00

பணிக்கூற்று[தொகு]

  • மலையக கலை இலக்கிய சஞ்சிகை

ஆசிரியர் பக்கம்[தொகு]

ஆசிரியர் பக்கத்தில் இதழாசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “மலைச்சாரல் மலையக மக்களின் சமூக அரசியல் பொருளாதார விடயங்களுக்காக குரல் கொடுக்கும். மலையக மக்களின் முற்றுமுழுதான விடுதலையை வென்றெடுப்பதற்கான உயிரோட்டக் கருத்துக்கள்: மாறுபட்ட கொள்கைகளாலும், கோட்பாடுகளாலும், தத்துவங்களினாலும் பிளவுகொண்டிருக்கும் மலையகத் தலைமைத்துவ சக்திகளையும் ஒன்றுபடுத்தி, வேற்றுமைக்கப்பால் பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒற்றுமைப்படுத்த மலைச்சாரல் பாடுபடும்.

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் மலையகம் தொடர்பான கட்டுரைகள், கவிதைகள். துணுக்குச் செய்திகள் இடம்பெற்றிருந்தன.

தொடர்பு முகவரி[தொகு]

மலைச்சாரல், இல 251, மல்லியப்பூ பசார், அட்டன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைச்சாரல்_(இதழ்)&oldid=857362" இலிருந்து மீள்விக்கப்பட்டது