மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் என்பவர் மலேசியத் தமிழ் எழுத்தாளர். பல ஆண்டுகளாக மலேசியத் தமிழ் ஊடகங்களில் எழுதி வருகின்றார். தமிழ்ப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், உள் நாட்டுக் கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் கணினி ஆசிரியராகவும், ஆங்கில மொழிப் பயிற்றுநராகவும் பணியாற்றியவர்.

தமிழ் மலர் (மலேசியா) நாளிதழின் ஆசிரியர்; மலேசிய அரசாங்கத்தின் செய்தி நிறுவனமான பெர்னாமா (Berita Nasional Malaysia) தலைமை இணை ஆசிரியர்; மலாய் மெயில் (Malay Mail) துணை ஆசிரியர்; இசுடிரேட்ஸ் டைம்ஸ் (Straits Times) நாளிதழின் துணை ஆசிரியர் பொறுப்புகள் வகித்தவர்.

வாழ்க்கை வரலாறு[தொகு]