மலங்கரை கத்தோலிக்கக் கல்லூரி, மரியகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலங்கரை கத்தோலிக்கக் கல்லூரி, மரியகிரி என்பது தமிழ்நாட்டின், மரியகிரியல் உள்ள ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரி திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது ஆகும். இது மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இது 1998 இல் தொடங்கப்பட்டது, இதில்  உயிர்வேதியியல், கனிணி அறிவியல் மற்றும் இயற்பியல் ஆகிய மூன்று பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. இந்த கல்லூரி மலங்கார கத்தோலிக்க திருச்சபையின் பிரதான பேராயர் மோரன் சிரில் மார் பஸ்லீஸஸ் கத்தோலோசோஸ் என்பவரால் தொடங்கி வைக்கப்பட்டது.