உள்ளடக்கத்துக்குச் செல்

மலகுனி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலாபாய் கிராமத்தில் மலகுனி ஆறு

மலகுனி ஆறு (Malaguni River) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பாயும் ஓர் ஆறாகும். மல்லகுனி ஆறு, மலங்குய் ஆறு என்ற பெயர்களாலும் இந்த ஆறு அறியப்படுகிறது. ஒடிசா மாநிலத்தின் குர்தா மாவட்டத்தில் உள்ள ஓர் ஆழ்பள்ள நீரோடை அல்லது மலை ஓடையாக இந்த ஆறு அறியப்படுகிறது. கஞ்சம் மாவட்டம் மற்றும் குர்தா மாவட்டத்தின் எல்லையில் மலகுனி ஆறு உருவாகிறது. குர்தா தாலுக்கா வழியாக வடகிழக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கில் பாய்ந்து, வரலாற்று சிறப்புமிக்க கோலாபாய் சாசான் கிராமத்தைக் கடந்து, பூரி மாவட்டத்தில் உள்ள பாலபத்ரபூர் கிராமத்திற்கு வடக்கே 1 கிமீ (0.62 மைல்) தொலைவில் 20°0′1″வடக்கு 85°37′30″கிழக்கு ஆள்கூறுகளில் தயா நதியுடன் இணைகிறது. பின்னர் தயா ஆறு தென்மேற்கே சிலிகா ஏரியில் பாய்ந்து பின்னர் அது வங்காள விரிகுடாவில் கலக்கிறது.[1]

இராமேசுவர் கிராமத்திற்கு அருகில் இந்த ஓடையில் ஒரு சிறிய நீர்ப்பாசன திட்டம் கட்டப்பட்டுள்ளது. வெள்ளம் வரும்போது, ​​குர்தா, சிலிகா மற்றும் டாங்கி தொகுதிகளின் சில பகுதிகள் மோசமாக பாதிக்கப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ghosh, Asish K.; Ajit K. Pattnaik. "fig.1 Chilika Lagoon Basin" (PDF). Chilika Lagoon Experience and Lessons learned Brief. UNEP International Waters Learning Exchange and Resource Network. p. 115. Archived from the original (PDF) on 2008-10-13. Retrieved 2008-12-23.
  2. Collector & D.M.; District Informatics Officer. "Khorda Topogaphy - RIVER SYSTEMS OF THE DISTRICT". Khordha District website. Archived from the original on 2009-02-08. Retrieved 2008-12-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலகுனி_ஆறு&oldid=4242340" இலிருந்து மீள்விக்கப்பட்டது