மறைமலை அடிகள் பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மறைமலை அடிகள் பாலம் (முன்பு மர்மலாங் பாலம் ) என்பது, அண்ணாசாலையில் அமைந்துள்ள, அடையாறு ஆற்றின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளை இணைக்கும் சாலைப் பாலமாகும்.[1]

மர்மலாங் பாலம், முன்புறத்தில் ஒரு சிப்பாய் மற்றும் பூர்வீக குடிகள், 1783, வில்லியம் ஹாட்ஜஸ், பிரித்தானிய கலைக்கான யேல் மையம்

வரலாறு[தொகு]

அடையாறு ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள இந்த மிகப் பழமையான மர்மலாங் பாலம், ஆர்மீனிய வணிகரான கோஜா பெட்ரஸ் உஸ்கான் (ஆங்கிலம்: Coja Petrus Uscan) என்பவரால் 1728 ஆம் ஆண்டில், ஒரு லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டது. அருகில் உள்ள மாம்பலம் கிராமத்தின் பெயரால் இந்தப் பாலம் பெயரிடப்பட்டது. இது மர்மலான் அல்லது மர்மலாங் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டது.[1] இந்தப் பாலம் பழுதடைந்தததால் 1966 ஆம் ஆண்டு புதிய பாலம் கட்டப்பட்டது.[2] புதிய பாலத்திற்கு தமிழாசிரியரும், தூய தமிழ் இயக்கத்தின் ஆதரவாளருமான மறைமலை அடிகளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது .

சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தை ஒட்டிய பாலத்தின் வடக்கு முனையில் உஸ்கான் பாலம் கட்டியதை நினைவு கூரும் விதமாக ஒரு பெயர்பலகை காணப்படுகிறது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Diwan Bahadur S. E. Runganadhan, தொகுப்பாசிரியர் (1939). Madras Tercentenary Celebration Committee Commemoration Volume. Indian Branch, Oxford Press. பக். 124. 
  2. Frederick, Prince (1 July 2009). "Memories of Madras: From Saidapet to Madras". தி இந்து இம் மூலத்தில் இருந்து 8 ஆகஸ்ட் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090808054807/http://www.hindu.com/mp/2009/07/01/stories/2009070150200100.htm. 

பிற ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறைமலை_அடிகள்_பாலம்&oldid=3925520" இலிருந்து மீள்விக்கப்பட்டது