மருத்துவப் பழமொழிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருத்துவப் பழமொழிகளின் பட்டியல்:

  • அளவுக்கு மி்ஞ்சினால் அமுதமும் நஞ்சு
  • அரசமரத்தைச் சுற்றி அடி வயிற்றைத் தொட்டுப்பார்த்தால்
  • அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாக
  • அஞ்சிபுலன் அடக்கினால் அகிலமும் அடங்கும்
  • ஆவாரை பூத்தால் சாவாரைக் கண்டதுண்டா.
  • ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
  • உடம்பை முறித்துக் கடம்பில் போடு.
  • ஓாிதழ்தாமரை உண்ணப் பலனுண்டாம்.
  • காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு மாலையில் கடுக்காய்.
  • சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. சுப்பிரமணியரக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை.
  • பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.
  • பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.
  • பொன்னாங்கண்ணி மேனியைப் பொன்னாக்கும்.
  • மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
  • மாதா ஊட்டாததை மா ஊட்டிவிடும்.
  • மருந்து கால் மதி முக்கால்
  • மருத்துவன் மருந்து கொடுக்கிறான் குணமாக்குபவன் இறைவனே.
  • முருங்கை உண்ண நொறுங்குமாம் மேகம்.
  • முருங்கைக் காய் என்றதும் முறிந்ததாம் பத்தியம்.
  • மூலிகை அரைத்தால் மூன்று உலகையும் ஆளலாம்.
  • வல்லாரை இருக்க எல்லாரும் சாவதேன்.
  • வாழை வாழ வைக்கும்.
  • வெங்காயம் உண்பார்க்குத் தன்காயம் பழுதில்லை.

சான்றுகள்[தொகு]

  • மு.பசுமலையரசு, புலவர் "செந்தமிழும் சித்த மருத்துவமும்" சீைத பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை - 2006.
  • பிருத்விராஜ் வர்மா ப. " தமிழ் நாட்டு மூலிகை மருத்துவம்" சுராபுக்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை - 2004.
  • ஆய்வு மாலை, ஓளவைத் தமிழ் ஆய்வு மாநாடு, திருவையாறு.