மயிலாடுதுறை சோழீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயிலாடுதுறை சோழீசுவரர் கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது. இக்கோயில் ஒரு வைப்புத்தலமாகும்.[1] [கு 1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக சோழீசுவரர் உள்ளார். பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பதால் இவர் சொன்னவாறு அறிவார் என்றும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள இறைவி பரிமள சுகந்தநாயகி என்றும் சௌந்தரநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்.[1]

அமைப்பு[தொகு]

விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், பிரம்மா, தட்சிணாமூர்த்தி, நால்வர், அக்னி, பாதாளசனீசுவரர், துர்க்கை, கஜலட்சுமி, நாகர், நந்தி, சண்டிகேசுவரர் ஆகியோர் உள்ளனர். மகரிஷிகளும் தேவர்களும் சிவனை வழிபட வரும்போது சுயம்புவான சனீசுவரர் அமிர்த கலசத்துடன் அவர்களை வரவேற்றதால் அமிர்தகலச சனீசுவரர் என்றும், பாதாளத்திலிருந்து தோன்றியதால் பாதாள சனீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்ட நளன் பல தலங்களுக்குச் சென்றபின்னர் இங்கு வந்தபோது மூலவர் சிவனை வணங்கியபின் சனீசுவரரை வணங்கியதாகவும் அப்போது அவர் திருநள்ளாறு சென்றால் சனி தோஷம் விலகும் என்றும் கூறியதன் அடிப்படையில் அங்கு சென்று தன் சாபம் நீங்கப் பெற்றதாகக் கூறுவர். [1]

திருவிழாக்கள்[தொகு]

வைகாசி பௌர்ணமி, மாசி மகம், கார்த்திகை, பிரதோஷம், சிவராத்திரி போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.[1]

குறிப்புகள்[தொகு]

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன் நூலில் (தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009) இக்கோயில் காணப்படவில்லை. ஆதலால் தேவார வைப்புத் தலங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

மேற்கோள்கள்[தொகு]