மம்தா தாக்கூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மம்தா தாகூர்
பங்கோன் தொகுதியின் மக்களவை உறுப்பினர்
பதவியில்
16 பிப்ரவரி 2015 – 23 மே 2019
பின்னவர்சாந்தனு தாக்கூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 15, 1964 (1964-05-15) (அகவை 59)
சந்திரபூர், மகாராட்டிரம், இந்தியா
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தொழில்சமூகப்பணி

மம்தா தாக்கூர்(Mamata Thakur) (பிறப்பு 15 மே, 1967) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர், பங்கான் மக்களவைத் தொகுதியில் 2015இல் நடந்த இடைத்தேர்தலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2019இல் நடந்த பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

தொழில்[தொகு]

மார்ச் 2015 முதல் இவர் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் நிலைக்குழுவின் உறுப்பினராக பணியாற்றினார். மக்களவை 2019இல் கலைக்கப்பட்டபோது இந்தப் பதவி முடிந்தது. சமயம் மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக, அரிசந்த் தாகூர் என்பவரால் 1860-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்து சமயத்தின் வைணவப் பிரிவு அமைப்பான் மாத்துவ மகாசங்கத்தின் மதத் தாயாக இருக்கிறார். இவர் தாகூர்நகரில் வசிக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மம்தா_தாக்கூர்&oldid=3191784" இலிருந்து மீள்விக்கப்பட்டது