மம்தா சாகர்
மம்தா சாகர் | |
|---|---|
மம்தா சாகர் 2018-இல் | |
| தேசியம் | இந்தியர் |
| பணி | எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 1992–முதல் |
மம்தா சாகர் (Mamta Sagar) என்பவர் ஓர் இந்தியக் கவிஞரும், கல்வியாளரும் கன்னட மொழியில் எழுத்தாளரும் ஆவார்.[1] இவருடைய எழுத்துக்கள் அடையாள அரசியல், பெண்ணியம், மொழியியல், கலாச்சாரப் பன்முகத்தன்மையைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துகின்றன. இவர் சிருஷ்டி கலை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்வி மற்றும் படைப்பு எழுத்துப் பேராசிரியராக உள்ளார்.[2] 2024-ஆம் ஆண்டில், உலக எழுத்தாளர்கள் அமைப்பால் வழங்கப்பட்ட உலக இலக்கியப் பரிசை சாகர் வென்றார்.
பணி
[தொகு]சாகர் கவிதை, உரைநடை, விமர்சனங்கள் கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார். இவரது சொந்தக் கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகத்தின் பாடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இவரது சில கவிதைகள் வாசு தீட்சித்[3] பிந்துமாலினி, சுனிதா அனந்தசாமி இசையுடன் இசைக்கப்பட்டுள்ளன.[4]
சாகர், வேல்சு-இந்தியா கூட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாக (2018) சிருஷ்டி பிலிம்சுடன் இணைந்து, இதே பெயரில் தனது சொந்தத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்ட மூன்று கவிதைத் திரைப்படங்களான இன்டர்வெர்ஷன்சு 1,2, & 3 ஆகியவற்றைத் தயாரித்தார். கௌரி லங்கேசுவிற்காக எழுதிய தனது கவிதையின் காணொளி விளக்கக்காட்சியான ஃபார் கௌரியையும் தயாரித்துள்ளார்.[5]
பெங்களூரு இலக்கிய விழாவில் பன்மொழி சமூக கவிதை நிகழ்வான காவ்யா சஞ்சே உட்பட, ஐதராபாத், பெங்களூரில் சர்வதேச, தேசியக் கவிதை, நாடக நிகழ்வுகளை சாகர் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் பன்னாட்டுக் கவிதை மொழிபெயர்ப்பு திட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார்.[6][7]
நூல் பட்டியல்
[தொகு]- காடா நவிலினா ஹெஜ்ஜே (காட்டு மயிலின் கால்தடங்கள்) – 1992
- சுக்கி சுக்கி சந்தக்கி – 1993
- நதியா நீரினா தேவா (நதியின் ஈரம்) – 1999
- ஹிகே ஹாலேயா மைலே ஹாடு (இது போன்ற பாடல்) - 2007
- ஒரு பெண் எழுத்தாளராக வளர்தல் (Growing Up as a Woman Writer)–2007
- மகிழ விஷயா – 2007
- இல்லி சல்லுவ மாது – 2010
- மறை & தேடுதல் (Hide & Seek)– 2014
- காஷா நபிந்து – 2018
- இடைச்செருகல்கள் (Interversions)(தொகுப்பு)
மொழிபெயர்ப்பு
[தொகு]- திருமலாம்பாவின் கவிதைகள்
- ஆசையின் ஊஞ்சல் - மய்யே பாரா மனவே பாரா நாடகம்
- சீமந்தா (2003) – நாகவேணியின் சிறுகதை
- 870 (2011) – எமிலி டிக்கின்சன் எழுதியது
- ஸ்லோவேனியன்-கன்னட இலக்கிய தொடர்புகள் (2011)
- தடைகளுக்கு அப்பால்: ஸ்லோவேனியன்-கன்னட இலக்கிய தொடர்புகள் (2011)
- ஸ்லோவேனியன்-கன்னட இலக்கிய தொடர்புகள் (2011)
- ப்ரீத்தியா நலவட்டு நியமகாலு (2017) - எலிஃப் ஷஃபாக்கின் நாவல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Subramaniam, Arundhathi. "Mamta Sagar (poet) – India". Poetry International Archives. Retrieved 19 April 2020.
- ↑ "Teaching Faculty". Srishti Institute of Art, Design and Technology. Archived from the original on 16 April 2020. Retrieved 19 April 2020.
- ↑ "Introducing Kannada classics in rock form". https://www.thehindu.com/news/cities/bangalore/introducing-kannada-classics-in-rock-form/article17413506.ece.(subscription required)
- ↑ "Song - Slaughter". I - Awadhi. Retrieved 19 April 2020.
- ↑ "Poetry flowed like blood and tears at a rally in Bengaluru this week to protest the murder of Gauri Lankesh". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/poetry-flowed-like-blood-and-tears-at-a-rally-in-bengaluru-this-week-to-protest-the-murder-of-gauri-lankesh/articleshow/60715375.cms.
- ↑ Peschel, Sabine. "Project 'Poets Translating Poets' proves that poetry is more than art". Deutsche Welle. Archived from the original on 8 November 2020. Retrieved 20 April 2020.
- ↑ "Mamta Sagar". Literature Across Frontiers. Retrieved 20 April 2020.