மம்சாபுரம்
Jump to navigation
Jump to search
மம்சாபுரம் (ஆங்கிலம்:Mamsapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தில் இருக்கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். இது ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து 8 கிமீ தொலைவிலும், விருதுநகரிலிருந்து 51 கிமீ தொலைவிலும் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மம்சாபுரம் பேரூராட்சி 5,388 வீடுகளும், 18,635 மக்கள்தொகையும் கொண்டது.[1]இது 52 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 150 தெருக்களும் கொண்ட மம்சாபுரம் பேரூராட்சி ஸ்ரீவில்லிப்புத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [2]
பெயர்க் காரணம்[தொகு]
மருதநாயகம் அல்லது கான்சாகிப் என்கிற முகமது யூசுப்கானின் பெயரால் மகம்மது கான்சாகிப் புரம் என்றழைக்கபட்ட ஊரே இப்பொழுது மம்சாபுரம் என்றழைக்கப்படுகிறது.[3]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ Mamsapuram Population Census 2011
- ↑ மம்சாபுரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ ந.ராசையா,மாமன்னன் பூலித்தேவன்,1992,பக்கம்116