மன்னார் மோகனப்பள்ளு
Appearance
மன்னார் மோகனப்பள்ளு தஞ்சாவூர் அரண்மனை சுவடி நூலகத்தில் தஞ்சாவூர் நாயக்க மன்னர் விஜயநாயக்கரால் சேர்க்கப்பெற்ற தமிழ்ச்சுவடியாகும்.
சிற்றிலக்கியம்
[தொகு]இது சிற்றிலக்கிய வகைப்பாட்டில் அடங்கும்.
பாடல்கள்
[தொகு]இரண்டு காப்புச்செய்யுள்களோடு தொடங்கும் இப்பள்ளு, 11 பாடல்களைக் கொண்டுள்ளது. மன்னார்குடி ராஜகோபாலப்பெருமாளான மன்னார் பெயரில் பள்ளு இலக்கியமாக இது அமைந்துள்ளது. [1]
அமைப்பு
[தொகு]தொல்காப்பியம் குறிப்பிடுகின்ற இலக்கண அமைதிக்கேற்றவாறு, சிலம்பில் காணப்படுகின்ற விருந்திற்பாணி, ஏர்மங்கலம், முகவைப்பாட்டு முதலிய பாடல்களை ஒத்து அமைந்துள்ள இப்பள்ளு இலக்கியம், ஆடும்பள்ளி, அழகுடைய பள்ளி போன்ற வரிக்கூத்துக்களைத் தழுவியும் உள்ளது. [1]