மன்னார்குடி ஈசுவரன்
மன்னார்குடி ஈசுவரன் | |
---|---|
பிறப்பு | மன்னார்குடி, தமிழ்நாடு, ![]() | ஏப்ரல் 1, 1947
மன்னார்குடி ஈசுவரன் (பிறப்பு:1947) தமிழகத்தைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார்.
இசைப் பயிற்சி[தொகு]
மன்னார்குடி ஈசுவரனின் தந்தையாராகிய அப்பையா தீக்சிதர், சமசுகிருத மொழியில் வித்தகராவார். ஈசுவரன் தனது ஆரம்பகால மிருதங்க இசைப் பயிற்சியை குனிசேரி கிருஷ்ணமணி ஐயரிடம் பெற்றார். அதன்பிறகு பாலக்காடு கே. குஞ்சுமணி ஐயரிடமும், குருவாயூர் ஜி. துரையிடமும் தொடர்ந்து கற்கும் வாய்ப்பு கிடைத்தது.
இசைப் பணி[தொகு]
1958ஆம் ஆண்டில் தி. பசுபதி என்பவரின் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிக்கு மிருதங்கம் வாசித்ததே மன்னார்குடி ஈசுவரனின் முறைப்படியான மேடை அரங்கேற்றமாகும். அனைத்திந்திய வானொலியின் திருச்சி நிலையத்திலும், சென்னை நிலையத்திலும் உயர்நிலை வாத்தியக் கலைஞராக பணியாற்றியுள்ளார். இவரின் மாணவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் அசுவின் சிறிதரன், முத்ரா பாஸ்கர் ஆகியோராவர்.
விருதுகள்[தொகு]
- கலைமாமணி விருது, வழங்கியது: தமிழ்நாடு அரசு
- சங்கீத நாடக அகாதமி விருது, 2008. வழங்கியது: சங்கீத நாடக அகாதமி[1]
- சங்கீத சூடாமணி விருது, 2014
- மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் விருது[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 23 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018.
- ↑ "Maharajapuram Viswantha Iyer Award for Mannargudi Easwaran" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304193644/http://www.carnaticdarbar.com/news/201201/20120124.asp.