மன்கியாலா தூபி

ஆள்கூறுகள்: 33°16′N 73°08′E / 33.26°N 73.14°E / 33.26; 73.14
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்கியாலா தூபி
மன்கியாலா தூபி, பாகிஸ்தான்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மன்கியாலா கிராமம், இசுலாமாபாத், பாகிஸ்தான்
புவியியல் ஆள்கூறுகள்33°16′N 73°08′E / 33.26°N 73.14°E / 33.26; 73.14
சமயம்பௌத்தம்
மாநிலம்பஞ்சாப்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டுகிபி இரண்டாம் நூற்றாண்டு
இத்தூபியின் நினைவுச் சின்னங்கள் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு உள்ளது.

மன்கியாலா தூபி (Mankiala Stupa) (உருது: مانكياله اسٹوپ) பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில், இசுலாமாபாத் நகரத்திற்கு அருகே உள்ள மன்கியாலா எனும் கிராமத்தில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட தூபியாகும்.

வரலாறு[தொகு]

பௌத்த ஜாதக கதைகளின் படி, கௌதம புத்தரின் ஒரு பிறப்பான இளவரசன் சத்துவன், மிகவும் பசியுடன் இருந்த ஏழு இளம் புலிகளுக்கு தன்னையே உணவாக அர்பணித்தமையைப் பாரட்டும் விதமாக இத்தூபி எழுப்பப்பட்டது. [1]

அமைவிடம்[தொகு]

பாகிஸ்தான் தலைநகரமான இசுலாமாபாத் நகரத்திற்கு தென்கிழக்கே 36 கிமீ தொலைவில் உள்ள மன்கியாலா எனும் கிராமத்தில் இத்தூபி உள்ளது.

தூபியின் காலம்[தொகு]

மன்கியாலா தூபி பேரரசர் கனிஷ்கர் ஆட்சியின் போது கிபி 128 -151க்கும் இடையே நிறுவப்பட்டதாகும்.[2] மௌரியப் பேரரசர் அசோகர் நிறுவிய 84 தூபிகளில் இதுவும் ஒன்று எனக் கூறுகின்றனர்.[2]

அகழாய்வு[தொகு]

இத்தூபியை பிரித்தானியரான எல்பின்சுடோன் என்பவர், கிபி 1808 அகழாய்வின் போது கண்டுபிடித்தார். [2]1891ல் இத்தூபி மறுசீரமைக்கப்பட்டது.

தொல்பொருட்கள்[தொகு]

கிபி 1830ல் ஜீன் - பாப்டிஸ்ட் வென்சுரா என்பவர் இவ்விடத்தை மீண்டும் அகழாய்வு செய்த போது கிடைத்த தொல்பொருட்களை பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைகக்கப்பட்டுள்ளது.[3] 1891க்குப் பின்னர் மன்கியாலா தூபி மறுசீரமைக்கப்படவில்லை என்பதால் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. [2]

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்கியாலா_தூபி&oldid=3067822" இலிருந்து மீள்விக்கப்பட்டது