மனிதவள மேலாண்மைத் துறை(தமிழ்நாடு)
தோற்றம்
| துறை மேலோட்டம் | |
|---|---|
| அமைப்பு | 1976 |
| ஆட்சி எல்லை | தமிழ்நாடு |
| தலைமையகம் | சென்னை |
| அமைச்சர் |
|
| அமைப்பு தலைமை |
|
| மூல அமைப்பு | தமிழ்நாடு அரசு |
| வலைத்தளம் | Human Resources Management Department |
மனிதவள மேலாண்மைத் துறை(தமிழ்நாடு) (Department of Human Resources Management (Tamil Nadu)) என்பது தமிழ்நாடு அரசின் துறைகளில் ஒன்றாகும்.
வரலாறு
[தொகு]பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை 1976ஆம் ஆண்டில் பொதுத் துறையிலிருந்து பிரிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டில், இத்துறை மனிதவள மேலாண்மைத் துறை எனப் பெயர் மாற்றப்பட்டது.[1]
நோக்கம்
[தொகு]இத்துறையின் முதன்மை நோக்கம், மனித வளத்தின் ஆட்சேர்ப்பு, பயிற்சி மற்றும் மேம்பாடு ஆகும். இது அனைத்து அரசுத் துறைகளின் நிர்வாகத்திலும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்கிறது, சீரான தன்மையையும் தரங்களையும் பராமரிக்கிறது, மேலும் தேவையான பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது.[1]
துணைப் பிரிவுகள்
[தொகு]பின்வரும் அமைப்புகள் துறையின் அதிகார வரம்பின் கீழ் செயல்படுகின்றன:[2]
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
- தமிழ்நாடு தகவல் ஆணையம்
- மாநில ஊழல் தடுப்பு ஆணையம்
- ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Human Resources Management department". Government of Tamil Nadu. Retrieved 1 December 2023.
- ↑ Human Resources Management department, policy note 2023-24 (PDF) (Report). Government of Tamil Nadu. Retrieved 1 December 2023.