மனமேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனமேடு
Manamedu
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்பாண்டிச்சேரி
வட்டம் (தாலுகா)பாகூர்
ஒன்றியம்பாகூர்
மொழிகள்
 • அலுவல்பூர்வம்பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண் -->607 402
அஞ்சல் குறியீடு0413
வாகனப் பதிவுPY-01
பாலின விகிதம்50% /

மனமேடு (Manamedu) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள பாகூர் தாலுக்காவில் இருக்கும் பாகூர் ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம்[1] ஆகும். புதுச்சேரியின் 11 அயலகச் சிற்றூர்களில் மனமேடும் ஒன்றாகும். பெண்ணையாற்றின் கரையில் அமைந்திருக்கும் இக்கிராமம், புதுச்சேரி - நெல்லிக்குப்பம் சாலைக்கு நுழைவாயிலாக இருக்கிறது.

வரலாறு[தொகு]

ஆற்றங்கரையின் உயரமான பகுதியாக இருப்பதால் இவ்வூருக்கு மனமேடு என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. மணல்மேடு என்ற சொல் காலப்போக்கில் மனமேடு என்றும் அழைக்கப்படுகிறது.

புவியியல்[தொகு]

ஒன்றியத் தலைமையிடமான பாகூருடன் மனமேடு எல்லைபுற சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. மனமேடு பகுதியில், பெண்ணையாற்றின் குறுக்காக ஒரு பாலம் கட்டப்பட்டுவருகிறது. இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு நிறைவு பெற்றவுடன், புதுச்சேரி – நெல்லிக்குப்பம் சாலைக்கு இன்றியமையாத ஒரு பாலமாகத் திகழப்போகிறது.

கிராமங்கள்[தொகு]

மணமேடு கிராமப் பஞ்சாயத்தில் பின்வரும் கிராமங்கள் இடம்பெற்றுள்ளன.

  • மணமேடு
  • கடுவனூர்

அரசியல்[தொகு]

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டும், ,நெட்டப்பாக்கம் தொகுதியின் ஒரு பகுதியாகவும் மணமேடு கிராமம் இருக்கிறது.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-03-27.

புற இனைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனமேடு&oldid=3623890" இலிருந்து மீள்விக்கப்பட்டது