மதினத் அல் ஜஹ்ரா
மதினத் அல்-ஜஹ்ரா (Medina Azahara, அரபு மொழி: مدينة الزهراء Madīnat az-Zahrā: "பூக்களின் நகரம்") என்பது எசுப்பானியாவில் கோர்டபா என்ற இடத்தில் அமைந்துள்ள ஓர் அரண்மனை ஆகும். இது குர்தூபா கலீபகத்தின் உமையா ஆட்சிக் காலத்தில் மூன்றாம் அப்துல் ரகுமான் (912-961) என்பவரால் கிபி 936-940 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் அமைக்கப்பட்ட இந்த அரண்மனை மற்றும் அதைச் சுற்றியுள்ள தோட்டமும் உலக புகழ் பெற்றதாகும்.[1] பராமரிக்கப்பட வேண்டிய புராதன சின்னங்களின் பட்டியலில் யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அரண்மனை சிலுவைப்போரின் போது முற்றிலும் சிதைக்கப்பட்டு விட்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Ruggles, D. Fairchild (2008). Islamic Gardens and Landscapes. University of Pennsylvania Press. பக். 152–153. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8122-4025-1.