மதனகாமராஜன் கதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதனகாமராசன் கதை (Madanakamaraja Katha) தென்னிந்திய நாட்டார் கதைகளுள் ஒன்று. இது தமிழில் மதனகாமராசன் கதை என்றும், தெலுங்கில் மதனகாமராச கதாலு என்றும் அழைக்கப்படுகிறது.[1][2] இது தென்னிந்தியாவில் சொல்லப்பட்ட கதைகளின் தொகுப்பாகும். இவற்றில் சில கதைகள் இலங்கையிலும் பிரபலமாக உள்ளது.[3][4][5]

கதை[தொகு]

இதன் கதைகள் ஆயிரத்தொரு இரவுகள் நூலில் சொல்லப்பட்ட கதைகளைப் போன்று நேரத்தைப் போக்குவதற்காக சொல்லப்பட்ட கதைகளை உள்ளடக்கியது. இளவரசனான மதனகாமராஜன் ஒரு ஓவியத்தில் இருந்த இரண்டு பெண்களைப் பார்த்து அவர்களின் மீது காதல் கொள்கிறான். தனது நண்பனான அமைச்சரின் மகனை அழைத்து, அந்த இரண்டு பெண்களையும் கண்டுபிடிக்குமாறு அறிவுறுத்தினான். அதில் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து தான் திருமணம் செய்ய போவதாகவும், மற்றொரு பெண்ணை அமைச்சரின் மகன் திருமணம் செய்து கொள்ளுமாறும் கூறுகிறான். அமைச்சரின் மகன் புறப்பட்டுச் சென்று இரண்டு பெண்களையும் கண்டுபிடித்து, அரண்மனைக்கு அழைத்து வருகிறான். அரண்மனை நோக்கி வரும்போது, அவர்களில் யார் தனது மனைவியாக இருப்பார் என்று தெரியாததால் அரண்மனையை அடையும் காலத்தை நீட்டிப்பதற்காக அவர்களுக்குப் பல கதைகளைச் சொல்வதன்மூலமாக காலம் தாழ்த்துகிறான். அவ்வாறு அவனால் கூறப்பட்டதாகக் கருதப்படும் கதைகள் அடங்கியதே இத்தொகுப்பு. இது தமிழில் 1848 மற்றும் 1855ஆம் ஆண்டில் வெளியானது.[6][7] இதனை நடேச சாஸ்திரி என்பவர் "திராவிட இரவுகள்" என்ற பெயரில் 1886ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பில் மொத்தம் பன்னிரெண்டு கதைகள் உள்ளன.[8]

இது நாட்டார் கதைகளில் முக்கியமானதாக இருந்தது என்றபொழுதிலும், தமிழ் இலக்கியக் பண்பாட்டில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.[9] இந்தக் கதையினை அடிப்படையாகக் கொண்டு 1941ஆம் ஆண்டு மதனகாமராஜன் என்ற திரைப்படம் வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Golla Narayanaswami Reddy (1988), The influence of English on Telugu literature, 1800-1950: with reference to translations and adaptations, Professor G.N. Reddy Sixtieth Birthday Felicitation Committee
  2. Charles Philip Brown; Golla Narayanaswami Reddy; Bangorey (1978), Literary autobiography of C.P. Brown, Sri Venkateswara University
  3. Henry Parker (1997), Village folk-tales of Ceylon (reprint ed.), Asian Educational Services, ISBN 978-81-206-1164-1
  4. Henry Parker (1977), Village folk-tales of Ceylon, Volume 2 (reprint ed.), Ayer Publishing, ISBN 978-0-405-10113-7
  5. Henry Parker (1914), Village folk-tales of Ceylon, Volume 3, Luzac & Co.
  6. East India Company Library (1851), A catalogue of the library of the Hon. East-India company: Supplement, Printed by J. & H. Cox, p. 119
  7. M. Manuel (1978), M. Manuel; K. Ayyappapanicker (eds.), English and India: essays presented to Professor Samuel Mathai on his seventieth birthday, Macmillan
  8. Folklore Society (Great Britain) (1887), The Folk-lore journal, Volume 5, Published for the Folk-lore Society, by Elliot Stock, p. 171
  9. Stuart Blackburn (2006), Print, folklore, and nationalism in colonial South India, Orient Blackswan, p. 203, ISBN 978-81-7824-149-4

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதனகாமராஜன்_கதை&oldid=3806325" இலிருந்து மீள்விக்கப்பட்டது