மண்ணடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மண்ணடி (Mannady) என்பது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இது மாவட்டத் தலைநகரான பத்தனம்திட்டாவுக்கு தெற்கே 24 கி.மீ. தொலைவிலும், மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 82 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[1]

பகுழ்பெற்ற வேலுத்தம்பி தளவாய் தன் இறுதிகாலத்தைக் கழித்தது மண்ணண்டி ஊரில்தான். பழமைவாய்ந்த பகவதி கோயில் இங்குள்ளது. இக்கோயில் அழகிய கற்சிற்பங்களுக்கு பெயர்பெற்றது. இங்கு ஆண்டுதோறும் பெப்ரவரி-மார்ச் மாதங்களில் திருவிழா நடக்கிறது. கேரளத்தின் நாட்டார் ஆய்வு மையமும், நாட்டார் கலை பயிலகமும் இந்த ஊரில் செயல்படுகின்றன.[2]

குறிப்புகள்[தொகு]

  1. http://www.onefivenine.com/india/villages/Pathanamthitta/Parakode/Mannady
  2. கேரளா ஒரு சுற்றுலா பார்வை, கலைமாமணி வி.கே.டி. பாலன், மதுரா வெளியீடு, 2005, பக்கம் 281
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்ணடி&oldid=3029829" இலிருந்து மீள்விக்கப்பட்டது