உள்ளடக்கத்துக்குச் செல்

மணி (ஓசை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணி
மணியின் பாகங்கள்: 1. Bell yoke or headstock, 2. canons, 3. crown, 4. shoulder, 5. waist, 6. sound bow, 7. lip, 8. mouth, 9. clapper, 10. bead line
மணியின் பாகங்கள்: 1. Bell yoke or headstock, 2. canons, 3. crown, 4. shoulder, 5. waist, 6. sound bow, 7. lip, 8. mouth, 9. clapper, 10. bead line
மணியின் பாகங்கள்: 1. Bell yoke or headstock, 2. canons, 3. crown, 4. shoulder, 5. waist, 6. sound bow, 7. lip, 8. mouth, 9. clapper, 10. bead line
தாள வாத்தியம்
வகைப்பாடுகஞ்சக் கருவி
ஓர்ன்பாஸ்டெல்-சாக்ஸ் வகை111.242
(மணிகள்: Percussion vessels with the vibration weakest near the vertex)
வரிசை

மிக உயர்ந்த ஓசையிலிருந்து, குறைந்த ஓசை வரை

தொடர்புள்ள கருவிகள்

குழாய் வடிவ மணி, மாட்டு மணி, கைமணி, சேமக்கலம்

மணி (Bell), வழிபாட்டுத்தலங்களில் குறிப்பாக, இந்து சமயம், கிறிஸ்துவ சமயம் மற்றும் பௌத்த சமய வழிபாட்டுத் தலங்களில் பூஜை வேளைகளில் மணியோசை ஒலிக்கப்படுகிறது. மணிகள் வெண்கலத்தால் செய்யபடுகிறது. . ஆலயமணிகள் மேடை போன்ற ஒரு உயர்ந்த தளத்தில் அமைத்து, கயிற்றால் அதன் நாக்கு பகுதியை இழுத்து அடிக்கப்படுகிறது. இதனால் நாக்குப் பகுதி ஆலயமணியில் பட்டு வெகு தொலைவு ஓசையை எழுப்புகிறது. நேரத்தை சுட்டுவதற்கு, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மணியோசை எழுப்பப்படுகிறது

வரலாற்று ரீதியாக, மணிகள் மதச் சடங்குகளுடன் தொடர்புடையவை. மேலும் அவை பல மதச் சேவைகளுக்காக சமூகங்களை ஒன்றிணைக்கப் பயன்படுத்தப்படுகிறது.[1] மேலும் முக்கியமான மதச் சடங்கு நிகழ்வுகள் அல்லது மக்களை நினைவுகூரும் வகையில் ஆலய மணிகள் உருவாக்கப்பட்டது. மேலும் அவை அமைதி மற்றும் சுதந்திரத்தின் கருத்துக்களுடன் தொடர்புடையவை. மணிகளைப் பற்றிய ஆய்வை மணிநூல் அல்லது மணி இயல் அல்லது பிரச்சாரவியல் (campanology) என்று அழைக்கப்படுகிறது.[2][3]

வரலாறு

[தொகு]
சீனாவின் ஷாங் வம்ச ஆட்சி காலத்தை சேர்ந்த மணி, கிமு 13ஆம் நூற்றாண்டு
சீனாவின் வெண்கல மணி, காலம் கிமு 18-16ஆம் நூற்றான்டு
சீன மணிகள், காலம் கிமு 433

மணிகளின் ஆரம்பகால தொல்பொருள் சான்றுகள் கிமு 3 ஆம் ஆயிரமாண்டுகள் சேர்ந்தவை. மேலும அவை புதிய கற்கால சீனாவின் யாங்சாவோ பண்பாட்டு காலத்தை சேர்ந்தவை ஆகும்.[4][5] சீனாவில் மட்பாண்டங்களால் செய்யப்பட்ட கிளாப்பர்-மணிகள் பல தொல்பொருள் தளங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[6]மட்பாண்ட மணிகள் பின்னர் உலோக மணிகளாக மேம்பாடு கண்டது.மெசொப்பொத்தேமியாவில் முதன்முதலாக ஆலயமணிகள் கிமு 1000 இல் தோன்றியது. [4] தாவோசி தொல்லியல் களத்தில் ஒன்றும் மற்றும் எர்லிடோ தொல்லியல் களத்தில் நான்கு ஆலய மணிகள் கண்டறியப்பட்டது. ஆரம்பகால உலோக மணிகள் கிமு 2000 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை.[7] சீனாவின் ஷாங் வம்ச ஆட்சியின் போது (கிமு 1600 - கிமு 1050) பிற வகையான மணிகள் தோன்றியது. அவைகள் குதிரை மற்றும் தேர்களில் அணிவிக்கப்பட்டது. மேலும் நாய்களின் கழுத்து மணிகளாகவும் பயன்படுத்தப்பட்டது.[8] கிமு 13 ஆம் நூற்றாண்டில், 150 கிலோ கிராம் (330 பவுண்டுகள்) எடையுள்ள மணிகள் சீனாவில் வார்க்கப்பட்டது. கிபி 1000 க்குப் பிறகு, மணிகள் செய்வதற்கு வெண்கலத்திற்குப் பதிலாக இரும்பு பொதுவாகப் பயன்படுத்தப்படும் உலோகமாக மாறியது. ஆரம்பகால இரும்பு மணி 1079 இல் தயாரிக்கப்பட்டது, இது ஊபேய் மாகாணத்தில் காணப்பட்டது. [9]

கிபி 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசிரியா இராச்சியத்தின் மணிகள் சுமார் 4 அங்குல உயரம் கொண்டது.. கி.பி 1 மற்றும் 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானிய மணிகள் சுமார் 8 அங்குல உயரம் கொண்டது. [10]. பழைய ஏற்பாட்டின் யாத்திராகமம் புத்தகத்தில் , ஜெருசலேமில் உள்ள தலைமை யூத சமய குருவின் அங்கியின் ஓரத்தில் சிறிய தங்க மணிகள் அலங்காரமாக அணிந்திருந்ததாகக் குறிப்பிடுகிறது.[11] பண்டைய கிரேக்கர்களிடையே, முகாம்களிலும், காவல்படைகளிலும், காவல் பார்க்கச் சென்ற ரோந்துப் படையினராலும் கை மணிகள் பயன்படுத்தப்பட்டது.[12] ரோமானியர்களிடையே, குளிக்கும் நேரத்தை அறிவிக்க மணி ஓசையால் அறிவிக்கப்பட்டது. அவர்கள் அவற்றை வீட்டில், ஒரு அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தினர். மேலும் கால்நடைகள் மற்றும் ஆடுகள் வழி தவறிச் சென்றால், கண்டுபிடிக்க ஏதுவாக அதன் கழுத்தில் மணிகள் கட்டி வைக்கப்பட்டது. கிபி 10 ஆம் நூற்றாண்டு வரை, ஐரோப்பிய மணிகள் 2 அடி உயரத்திற்கு மேல் இல்லை.[10]

தேவாலயம் மற்றும் கோயில் மணிகள்

[தொகு]

கிழக்கு உலகில், கோயில் மற்றும் அரண்மனை மணிகள் பாரம்பரிய வடிவங்கள் கொண்டது. சிறிய மணிகள் ஒரு குச்சியால் அடிக்கப்படுகிறது. பெரிய மணிகளின் ஊசலாடும் நாக்குப் பகுதியில் கற்றைக் கட்டி இழுத்து அடித்து ஒலி எழுப்பப்படுகிறது ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளில் பெரிய அளவிலான மணிகள் ஒலி எழுப்ப பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் திருப்பலியின் போது ஒரு சேவையாளரால் தேவாலய மணி அடிக்கப்படுகிறது.

பௌத்தம் மற்றும் இந்து சமயத்தில் மணிகள்

[தொகு]

சமஸ்கிருதத்தில் "காண்டா" (Ghaṇṭā) என்பதற்கு மணி என்று பொருள். சமண, இந்து மற்றும் பௌத்த மணிகள் பூஜை, சமயச் சடங்குகள் மற்றும் விழாக்களில் பயன்படுத்தப்படுகிறது. பல இந்து கோயில்களின் வாயிலில் ஒரு மணி தொங்கவிடப்பட்டு, கோவிலுக்குள் நுழையும் பக்தர்களால் ஒலிக்கப்படுகிறது. பௌத்தக் கோயில்களில் நீண்ட உருளை வடிவத்தில் செங்குத்தான வடிவில் மணிகள் கொண்டிருக்கும். உருளைகளை உருட்டுவதன் மூலம் மணியோசை எழுப்பப்படுகிறது.

படக்காட்சிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ross 1911, ப. 687–691.
  2. Rubino, Anthony (2010-03-18). Why Didn't I Think of That?: 101 Inventions that Changed the World by Hardly Trying (in ஆங்கிலம்). Simon and Schuster. ISBN 978-1-4405-0698-7.
  3. Campanology
  4. 4.0 4.1 von Falkenhausen 1994, ப. 132.
  5. Yangshao culture
  6. Ling (bell)
  7. von Falkenhausen 1994, ப. 132, 329, 342, Appendix I.
  8. von Falkenhausen 1994, ப. 134.
  9. Rostoker, Bronson & Dvorak 1984, ப. 750.
  10. 10.0 10.1 Needham 1962, ப. 195.
  11. Exodus 28:33–34
  12. National Cyclopaedia of Useful Knowledge 1874.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணி_(ஓசை)&oldid=4235469" இலிருந்து மீள்விக்கப்பட்டது