மணலூர் ஏழுலோகநாயகி அம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணலூர் ஏழுலோகநாயகி அம்மன் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

கும்பகோணம்,குத்தாலம் நெடுஞ்சாலையில் காவிரியின் வட கரையில் கஞ்சனூருக்கு மேற்கே 3.கிமீ தொலைவில் உள்ளது.

மூலவர்[தொகு]

இக்கோயிலில் மூலவராக ஏழுலோகநாயகி அம்மன் உள்ளார். தீச்சுவாலைகளால் ஆகிய மகுடத்தோடு, சாய்ந்த தலையுடன் எட்டு கரங்களைக் கொண்டு அசுரனை வதம் செய்யும் கோலத்தில் உள்ளார். [1]

சிறப்பு[தொகு]

சப்தமாதர்களான பிராமி,மகேஸ்வரி,கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மகேந்திரி, சாமுண்டி என்ற ஏழு தேவியர்களும் சேர்ந்த உருவமாய் இந்த அம்மன் உள்ளார். [1]

விழா[தொகு]

இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளி இணைப்புகள்[தொகு]