மட்டக்களப்பு மறைமாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மட்டக்களப்பு மறைமாவட்டம்
Dioecesis Batticaloaensis
அமைவிடம்
நாடுஇலங்கை
மாநிலம்கொழும்பு
பெருநகரம்கொழும்பு
புள்ளிவிவரம்
பரப்பளவு7,269 km2 (2,807 sq mi)
மக்கள் தொகை
- மொத்தம்
- கத்தோலிக்கர்

1,199,966
55,225 (4.6%)
பங்குதளங்கள்24
விவரம்
திருச்சபைஉரோமன் கத்தோலிக்கம்
வழிபாட்டு முறைஇலத்தீன் வழிபாட்டு முறை
உருவாக்கம்23 செப்டம்பர் 2012
கதீட்ரல்புளியந்தீவு புனித மரியாள் தேவாலயம், மட்டக்களப்பு
பாதுகாவலர்அன்னை மரியா
தற்போதைய தலைமை
திருத்தந்தைபிரான்சிசு
மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர்யோசப் பொன்னையா
பேராயர் †கர்தினால் மால்கம் ரஞ்சித், கொழும்பு பேராயர்

மட்டக்களப்பு மறைமாவட்டம் (Diocese of Batticaloa, இலத்தீன்: Dioecesis Batticaloaensis) என்பது இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் உரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் ஆகும். இம்மறைமாவட்டத்தின் ஆயர் அதிவணக்கத்துக்குரிய கலாநிதி யோசப்பு பொன்னையா ஆவார்.

வரலாறு[தொகு]

மட்டக்களப்பு மறைமாவட்டம் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களினால் 2012 சூலை 3 ஆம் நாள் இலங்கையின் புதிய மறைமாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. முன்னர் இம்மாவட்டம் திருகோணமலை மறைமாவட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. திருகோணமலை மறைமாவட்டம் 1893 ஆகத்து 25 இல் உருவாக்கப்பட்டது.[1]

ஆயர் இக்னேசியசு கிளெனி திருகோணமலை மறைமாவட்டத்தின் பெயரை மாற்றுவதற்கு விண்ணப்பித்திருந்தார். இதன்படி, 1967 அக்டோபர் 23 இல் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டம் என இது பெயரிடப்பட்டது.[1] அத்துடன் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் தேவாலயம் இணைப்பேராலயமாகவும் தரமுயர்த்தப்பட்டது. 1975 திசம்பர் 19 இல் திருகோணமாலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட அநுராதபுரம் மறைமாவட்டத்தில் சேர்க்கப்பட்டது.[1]

2005 ஆம் ஆண்டில் இம்மறைமாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் படி, 2012 சூலை 3 ஆம் திகதி வத்திக்கான் நேரப்படி செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு (இலங்கை நேரம் பிற்பகல் 3.30 மணி) திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு பிரித்தெடுக்கப்பட்டு தனியான மறைமாவட்டமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. மட்டக்களப்பு புனித மரியாள் ஆலயம் பேராலயமாகும் தகுதியினையும் பெற்றது.[2] மட்டக்களப்பு-திருகோணமலை மறைமாவட்ட துணை ஆயராகப் பதவியில் இருந்த யோசப் பொன்னையா மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராக 2012 செப்டம்பர் 23 ஆம் நாள் பதவியேற்றார்.

மட்டக்களப்பு புதிய மறைமாவட்டமாக உருவானதால், திருகோணமலை தனி மறைமாவட்டமாக இயங்கத் தொடங்கியுள்ளது. இதுவரை திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஆயராக இருந்த யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை புதிய திருகோணமலை மறைமாவட்டத்தின் ஆயராக நீடிக்கின்றார்.

புள்ளி விவரங்கள்[தொகு]

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மறைமாவட்டம் இரு மாவட்டங்களை உள்ளடக்கும். அவை மட்டக்களப்பு, அம்பாறை ஆகும். இம்மறைமாவட்டத்தில் மறைமாவட்ட குருக்கள் 35 பேரும், துறவற குருக்கள் 13 பேரும் ஆக, மொத்தம் 48 குருக்கள் பணியாற்றுகின்றனர்.

ஆயர்கள்[தொகு]

# ஆயர் தொடக்கம் முடிவு
1வது யோசப் பொன்னையா 3 சூலை 2012

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Diocese of Trincomalee-Batticaloa". GCatholic.
  2. இன்று புதிய மறைமாவட்டமாகும் மட்டக்களப்பு[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், செப்டம்பர் 23, 2012.