மஞ்சு வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சு வர்மா
Manju Verma
சட்டமன்ற உறுப்பினர் - பீகார்
முன்னையவர்அணில் சவுத்ரி
தொகுதிசேரியா பரியார்பூர்
பதவியில்
2010–2015
பதவியில்
2015–2020[1]
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
துணைவர்சந்திரசேகர் வர்மா
வாழிடம்சூபவுல்

மஞ்சு வர்மா (Manju Verma) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பீகார் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார்.[2]

இளமை[தொகு]

வர்மா குஷ்வாஹா அல்லது கோரி இனத்தைச் சேர்ந்தவர்.[3] இவர் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த வாக்குமூலத்தின்படி, இடைநிலை வரை கல்வியை கற்றுள்ளார். இவரது கணவர் ஒரு விவசாயத் தொழிலாளி.[4]

அரசியல் வாழ்க்கை[தொகு]

மஞ்சு வர்மா பேகூசராய் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சேரியா-பரியார்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த தொகுதியில் முன்பு இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராக இருந்தவர் இவரது மாமியார். இதே நேரத்தில் அவரது கணவரும் இவர் முன்பு இருந்த ஜனதா தளத்தின் (யுனைடெட்) தலைவர் ஆவார். வர்மா 2010 மற்றும் 2015ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 2015ஆம் ஆண்டில், நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் இவர் மட்டுமே பெண் உறுப்பினராக இருந்தார். இங்கு அவருக்கு சமூக நீதித்துறை பொறுப்பு வழங்கப்பட்டது.

வர்மா தொடர்புடையதாகக் கூறப்படும் முசாபர்பூர் காப்பக வழக்கு காரணமாகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இளம் பெண்கள் தங்கவைக்கப்பட்ட தங்குமிடத்தின் பராமரிப்பு இவரது அமைச்சகத்தின் பொறுப்பிலிருந்தது. ஆதரவற்ற இளம் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான "தங்குமிடம் வழக்கு" தொடர்பாக இவரின் மூதாதையர் வீட்டில் காவல்துறை சோதனை நடந்தபோது, இவர் மீதும் இவரது கணவர் மீதும் "ஆயுதச் சட்டத்தின்" கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தங்குமிடத்தின் உரிமையாளர் பிரஜேஷ் தாக்கூர் கைது செய்யப்பட்ட பிறகு, இவரைக் கைது செய்ய காவல்துறையினர் கைது செய்யத் தவறிவிட்டனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு, இவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இது அரசியல் ரீதியாகப் பலிவாங்கும் வழக்கு என நிதிஷ் குமார் குற்றம் சாட்டினார்.[5][6]

2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில், முசாபர்பூர் தங்குமிட வழக்கில் இவரது கணவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்குகளைத் தொடர்ந்து வர்மா பதவி விலகினார். ஐக்கிய ஜனதா தளம் கட்சி இவரை மீண்டும் பீகார் சட்டமன்றத்திற்கான கட்சி வேட்பாளராகப் சேரியா-பரியார்பூர் தொகுதியில் நிறுத்தியது.

இந்த தேர்தலில் இராச்டிரிய ஜனதா தளத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜ் பன்ஷி மகேதோவ் வர்மாவினைத் தோற்கடித்தார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cheria Bariarpur Election Result 2020: चेरिया बरियारपुर पर अब राजवंशी का 'राज', समर्थकों ने मनाया जश्न". Prabhat khabar. பார்க்கப்பட்ட நாள் 8 August 2022.
  2. "Nitish Kumar has traced the real culprit in the Muzaffarpur shelter home outrage - the 'system'". www.dailyo.in. Archived from the original on 13 September 2020. பார்க்கப்பட்ட நாள் 2018-08-07.
  3. Bhelari, Amit. "Caste card counter". The Telegraph (Kolkata). Archived from the original on 14 September 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-07-27. "I belong to the Kushwaha caste which is also known as Koiri. Our caste has always become the role model of guiding the society, our ancestor is emperor Asoka and we follow his guidelines. We are engaged in farming and feed others. We never suppress anyone and are not involved in heinous crimes. It is the RJD and the Yadav caste that is involved in such acts," Manju declared at a media conference at her 6 Strand Road residence.
  4. "InfoBiharcandidate_Manju Verma". Myneta.com. Archived from the original on 29 July 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-07-27.
  5. "ex-bihar-minister-manju-verma-says-being-harrased-because-she-belongs-to-weaker-caste-". NDTV. Archived from the original on 29 July 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-07-27.
  6. "muzaffarpur-shelter-home-brajesh-thakur-moves-hc-against-jail-for-life-for-sexual-assault". outlook India. Archived from the original on 29 July 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-07-27.
  7. "JDU ex minister Manju Verma trails". The Print. 10 November 2020. Archived from the original on 10 November 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-11-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சு_வர்மா&oldid=3677223" இலிருந்து மீள்விக்கப்பட்டது