போங்கைகாவொன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
தோற்றம்

போங்கைகாவொன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Bongaigaon Refinery), இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேசனுக்கு சொந்தமான பாறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றாகும்[1].இது வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கீழ் அசாம் கோட்டததில் உள்ள சிராங் மாவட்டத்திலுள்ள போங்கைகாவொன் எனுமிடத்தில் அமைந்துள்ளது.[2]
இவ்வாலை பாறை எண்ணெய்யிலிருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், திரவ பெட்ரோலிய வாயு, நெய்தை, கற்கரி, எரிநெய், அசுபால்ட்டு, கந்தகம், வானூர்தி எரிபொருள், செயற்கை உரங்கள் மற்றும் நெகிழி தயாரிக்க தேவையான பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.[3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bongaigaon Refinery". Indian Oil Corporation Ltd. Archived from the original on 2018-12-14. Retrieved 2018-12-11.
- ↑ "Refineries, petrochemical plant shut; Assam, North-East headed for fuel crisis - ET EnergyWorld". தி எகனாமிக் டைம்ஸ் (in ஆங்கிலம்). Archived from the original on 2019-12-30. Retrieved 2020-09-01.
- ↑ Bongaigaon Refinery