பொன் மலை சண்டை
Jump to navigation
Jump to search
பொன் மலைச் சண்டை அல்லது பொன் மலைப் போர் (Battle of Golden Rock) என்பது 1753, சூன் 26 இல், இரண்டாம் கர்நாடகப் போரின் போது, பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனப் படைகளுக்கு இடையே நடந்த போர் ஆகும். ஐதர் அலி தலைமையில் மைசூர் அரசின் குதிரைப்படை உதவியுடன் பிரெஞ்சுப் படைகள் திருச்சிராப்பள்ளி அருகே பிரித்தானியப் புறக்காவல் நிலையைத் தாக்கினர். இச்சண்டையில் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் தலைமையின் கீழிருந்த பிரித்தானியப் படை வெற்றி பெற்றது.
குறிப்புதவிகள்[தொகு]
- பாரஸ்ட், சர் ஜார்ஜ். லார்ட் கிளைவ் வாழ்க்கை