பொன்னேர் உழுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்மாவில் போன்னேர் விழாவை சித்தரிக்கும் 20 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய ஓவியம்

பொன்னேர் உழுதல் (Royal Ploughing Ceremony) என்பது பருவகாலம் பார்த்து முதன் முதலாக ஏர்பிடித்து செய்யும் உழவு முறையாகும்.[1] இது சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் இருந்துவருவதை அகநானூற்று பாடல்கள் வாயிலாக அறியலாம்.[2] இதை இளங்கோவடிகள் ஏர்மங்கலம் எனக் குறிப்பிடுகிறார்.[3] முதன் முதலாக ஒரு நிலப்பகுதியில் நல்ல நாளில் ஏர் பூட்டி உழத் தொடங்குவதைப் பொன்னேர் பூட்டல் என்பர். கொங்கதேச வேளிர் தலைவர்களாலும், தாய்லாந்து, கம்போடிய, இலங்கை , பர்மிய மன்னர்களாலும் இன்றளவும் நடத்தப்பெருகிறது.[4]

தற்காலத்தில் தமிழ்நாட்டின் கிராமங்களில் இந்த விழாவானது சித்திரை மாதத்தில் நடத்தப்படுகிறது. இந்த நாளில் கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் மாடுகளை ஏரில் பூட்டி ஊர் பொது இடத்தில் வரிசையாக அணிவகுத்து உழுது பூசைசெய்து வழிபடும் வழக்கம் உள்ளது.

இன்கா நாகரிகம்[தொகு]

இன்கா வேளாண்மை முறையிலும் மன்னரே புதிய விவசாய நிலங்களை முதலாவதாக உழுது தொடங்கி வைப்பார். அங்கேயும் அவர் பொன்னாலான கலப்பையையே பயன்படுத்துவார்.[5]

மகதம்[தொகு]

பண்டை மகதநாட்டு ஊர்களில் ஆண்டுதோறும் முதலுழவு உழும்போது, ஊர்த்தலைவன் பொன்னாற் செய்த ஏரைப் பூட்டி உழவர் வரிசையில் முதலில் நின்று, பிறர் பின்வர, ஒரு படைச்சாலோட்டித் தொடங்கிவைப்பான் என்று சொல்லப்படுகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. சென்னைப் பல்கலையின் தமிழ்ப் பேரகரமுதலியின் இணையப்பக்கம்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த்
    தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்; - அகம் - 1

    பொன்னேர் பசலை பாவின்று மன்னே! அகம் - 172

    பொன்னேர் பசலை ஊர்தரப், பொறிவரி
    நல்மா மேனி தொலைதல் நோக்கி, அகம் - 229
  3. http://www.tamilvu.org/courses/degree/p103/p1033/html/p103325.htm
  4. https://en.wikipedia.org/wiki/Royal_Ploughing_Ceremony
  5. நாகரிக வரலாறு (பண்டைக் காலம்), டாக்டர்.ஏ.சுவாமிநாதன், ராகவேந்திரா அச்சகம், reference book for TNPSC group 1 & M.A. History
  6. தமிழர் வரலாறு-1, பாவாணர்

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னேர்_உழுதல்&oldid=3854991" இலிருந்து மீள்விக்கப்பட்டது