பொதுவுடமை தொழிலாளர் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொதுவுடமை தொழிலாளர் கட்சி (Communist Workers Party, கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பார்ட்டி) இந்தியாவில் இயங்கும் ஒரு அரசியல் கட்சி. இதன் தலைவராக உள்ளவர் சங்கர் சிங். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். சுசியை சிப்தாஸ் கோஷ் துவங்கிய போது இவர் உடன் இருந்தவர். இவர் விடுதலைப் போராட்ட வீரரும், ஒரு முதுபெரும் சோசலிசவாதியும் ஆவார். தமிழகக் கிளைத் தலைவராக தோழர் அருளநந்தன் சாமி உள்ளார்.

இந்த கட்சியானது தமிழகம், கேரளம், மகாராட்டிரம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் உள்ளது. தமிழில் மாற்றுக்கருத்து பத்திரிக்கை வெளி வருகிறது.