பேய்மகள் இளவெயினி
Jump to navigation
Jump to search
பேய்மகள் இளவெயினி (பேய்மகள் இள எயினி) சங்ககாலப் பெண் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் புறநானூறு 11[1] ஆம் பாடலாகச் சங்கத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளது. அதில் இவர் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவின் கொடைப் பெருமையைப் பாராட்டியுள்ளார்.
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ புலவராகவும் அரசனாகவும் விளங்கியவர்.
இளவெயினியின் பாடல் சொல்லும் செய்தி:
- மடமங்கையர் பூக் கொய்து மணல்-பாவைக்குச் சூட்டிவிட்டுத் தண்ணான் பொருநை புனலில் பாய்ந்து விளையாடும் வஞ்சி வேந்தன் இவன்.
- இவன் பகைமன்னர் அரண் கடந்து அவர்களைப் புறங்கண்டான்.
- இவனைப்பற்றி மறம் பாடிய பாடினிக்குக் கழஞ்சு எடை கொண்ட பொன்னணிகளை வழங்கினான்.
- பாடினி பாடும்போது அவள் குரலுக்கு இணையாக யாழ் மீட்டிய பாணனுக்கு பொன்னால் செய்த தாமரைப் பூவை விருதாக வழங்கினான்.
பாடலில் புதுமையான நடையோட்டம் காணப்படுகிறது. பாடலடிகளில் மடக்கணி காணப்படுகிறது.