பேச்சு:பாரம்பரிய நெல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//1959 ஆம் ஆண்டு இந்தியாவின் கட்டக் பகுதியில் அமைந்திருந்த மைய அரிசி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் ஆர்.எச். ரிச்சாரியா, இந்தியாவிற்கு அதிக விளைச்சல் தரும் பாரம்பரிய விதை நெல் வகைகளை சேகரித்து அவற்றை பயன்படுத்துவதே உகந்தது என்றும் நவீன ஐ.ஆர்.ஆர் ரக வீரிய நெல் விதைகள் நோய் பரப்பக்கூடியவை என்றும் எடுத்துக்கூறி நவீன ரகத்திற்கு அனுமதி மறுத்து அதன் விளைவாக மாற்றம் செய்யப்பட்டு,பிற்காலத்தில் நோயுற்று வறுமையில் வாடி இறந்தார்.//

கட்டுரையில் மேலுள்ள பந்தி வேறொரு கருத்தை அதாவது 'டாக்டர் ஆர்.எச். ரிச்சாரியா நவீன நெல் ரகத்திற்கு அனுமதி மறுத்து அதன் காரணமாக நோயுற்று வறுமையில் வாடி இறந்தார்' எனப் பொருள் தருகின்றது. விக்கியாக்கம் தேவை.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:51, 10 செப்டம்பர் 2014 (UTC)


தினமணி தகவல் அதிலுள்ளபடி:

1959-இல் கட்டக்கில் உள்ள மைய அரிசி ஆராய்ச்சி நிறுவன இயக்குநராயிருந்த டாக்டர் ஆர்.எச். ரிச்சாரியா அதிக விளைச்சல் தரும் பாரம்பரிய விதைகளைச் சேகரித்து வைத்திருந்து இந்தியச் சூழ்நிலைக்கு நோய் பரப்பும் ஐ.ஆர்.ஆர். ரக வீரிய நெல் விதை தேவை இல்லை என்று எடுத்துக்கூறி, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் தர கையெழுத்திட மறுத்தார். இதனால் பதவி மாற்றம் செய்யப்பட்டார். இந்த மாற்றம் செல்லாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவர் சம்பளம் நிறுத்தப்பட்டது. நீதிக்குப் போராடி வறுமையில் வாடி இறுதியில் நெஞ்சுவலியால் இறந்து போனார்.[1]

குழலி. தங்கள் தகவல்களுக்கும் உரையாடலுக்கும் நன்றிகள். டாக்டர். ரிச்சாரியா 1966 இல் மத்திய அரசின் இந்திய விவசாய ஆராய்ச்சி கழகத்தில் இருந்து பதவி விலகினார். அதிலிருந்து 30 வருடங்களுக்குப் பின் 1996 இல் தனது 87 ஆவது வயதில் மரணமடைந்தார். இதற்கிடையில் வேறுபல பதவிகளில் பணியாற்றினார். பார்க்க:ரிச்சாரியா
பின்னர் பணியாற்றிய போதும், ரிச்சார்யா, அரசால் அவரது திறமைக்கேற்ற அளவு அங்கீகரிக்கப்பட்டதாகவோ அவரது ஆராய்ச்சிகள் இந்திய அரசின் முழு ஒத்துழைப்புடன் பிரச்சனையின்றி நிகழ்ந்தவையாகவோத் தெரியவில்லை.

இன்றளவும் இந்திய அரசால் விருதுகள் எதுவும் இவருக்கு வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை, இவருக்குப் பின்னர் வந்த சுவாமிநாதன் விருதுகள் பெற்றுள்ளார்..ரிச்சார்யா எதிர்கொண்ட பிரச்சனைகள் விபரங்கள் அனைத்தும் கொண்ட முழு வாழ்க்கைக் வரலாறு கிடைத்தால் தெளிவாக இருக்கும்..--Kuzhali.india (பேச்சு) 14:46, 11 செப்டம்பர் 2014 (UTC)

In 1971, Richharia was recalled from retirement to head the Madhya Pradesh Rice Research Institute in Raipur and also to function as agriculture advisor to the Government of Madhya Pradesh. His work there from 1971 to 1976 was again pioneering work of great value, with special reference to preserving and protecting the agricultural heritage of tribal farmers. Again, however, vested interests manipulated things to deprive him of opportunities to continue work of great value which had reached a critical stage. From 1978 till his death, Richharia, now deprived of all official facilities for scientific work, continued his work against great odds at his residence and at a farm located a few miles away from his home in Bhopal. During his last days, he was working on an encyclopaedia of rice germ plasm of Madhya Pradesh and Chhattisgarh in which 20000 cultivars of rice were to be listed. This was the result of several years of collection and identification of rice cultivars. - See more at: http://pressinstitute.in/he-always-strove-to-help-the-poor-indian-rice-farmer/#sthash.LDPgdwDq.dpuf

  1. http://www.dinamani.com/editorial_articles/2013/05/07/அழிந்து-வரும்-பாரம்பரிய-வித/article1579516.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாரம்பரிய_நெல்&oldid=1722014" இலிருந்து மீள்விக்கப்பட்டது