பேச்சு:பவளமலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • கட்டுரையாசிரியன் செங்கைப்பொதுவன் இந்தப் பவளமலையின் உச்சியிலிருந்து தன் உழவு மாடுகளுக்குப் புல்லும், நன்செய் வயலில் நெற்பயிர்களுக்கு இடையே பயிர் உரமாகப் போட்டு மிதிக்கத் தழை-உரமும் பலநாள் தலையில் சுமத்துவந்து உழவுத்தொழில் செய்தவன்.
  • பச்சைமலை, பவளமலை மலையாளிகளோடு பழகியவன்.
  • தன் அம்மாவும் பாட்டியும், தம் இல்லத்தில் மலையாளுகளுக்குப் பல நாள் உணவு படைத்ததைக் கண்டு மகிழ்ந்தவன்.
  • மலையில் அவர்கள் வாழும் ஊர்களுக்கெல்லாம் சென்றபோது அவர்கள் வெட்டித் தந்த இளநீரைப் பருகியும், அறுத்துத் தந்த பலாச்சுளைகளை உண்டும் மகிழ்ந்தவன்.
  • அவர்களின் ஊரிலுள்ள புளியமரங்களின் பழங்களை விலை பேசி, புளி அடித்துச் சுமந்துகொண்டு மலையிலிருந்து இறங்கி வந்து தம் குடும்பத் தேவைக்குப் பயன்படுத்திக்கொண்டவன்.
  • அந்த மலையாளிகள் அறுத்துக் கட்டி வைத்திருக்கும் காவட்டாம் புல்லை விலைக்கு வாங்கி, கட்டுக்கட்டாகச் சுமந்து இறக்கிக்கொண்டு வந்து தான் வாழ்ந்த வீட்டுக் கூரையை வேய்ந்துகொண்டவன்.
    • இப்படிப்பட்ட வரலாற்றுப் பட்டறிவுக் கட்டுரை இது.
    • செய்திகள் இக்கால ஆவணப் பதிவுகளில் உள்ளவை. --Sengai Podhuvan (பேச்சு) 00:30, 26 மார்ச் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பவளமலை&oldid=1389858" இலிருந்து மீள்விக்கப்பட்டது