பேச்சு:நவாலி தேவாலயத் தாக்குதல்
இக்கட்டுரையை ஆரம்பித்தற்கு நன்றி சிறீதர், இத்தாக்குதல் நடந்தபோது நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன் அவ்விடத்திற்கு நான் மறுநாள் சென்றபோது ஒரே இரத்த களரியாக இருந்தது. தேவாலயம் மாத்திரம் அன்றி முன்னால் இருந்த கோயிலும் பலத்த சேதங்களுக்குள்ளாகி இருந்தது. --Umapathy 10:42, 8 ஜூலை 2007 (UTC)
- உமாபதி, தங்கள் நினைவுகளையும் இங்கு பகிர்ந்தமைக்கு நன்றிகள். அந்தக் கோயில் நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் கோயிலாக இருக்க வேண்டும். அதைப் பற்றியும் கட்டுரையில் இருக்கிறது. வசந்தனின் பதிவில் குண்டுவீச்சுக்கிலக்கான தேவாலயத்தின் புகைப்படம் உள்ளது. அப்படத்தில் இருந்து சேத விபரங்களை ஊகிக்கலாம்.--Kanags 10:50, 8 ஜூலை 2007 (UTC)